வானிலை நிபுணருக்கு வாழ்த்து
சக்தி சிறினிசங்கர்
அறுசீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் விளம் விளம்/ விளம் விளம் விளம்
அறிவியல் ஆர்வலர்
உலகினை
ஆள்பவர் அவரது சேவையில்
குறியது இருந்திடும் குறிப்புகள்
குறித்திடக் குவலயம் கேட்டிடும்
நெறிமுறை சொல்பவர் நிமிடமும்
நேரமும் சரியென உரைப்பவர்
செறிந்திடும் கல்வியும் ஞானமும்
சேர்ந்துதான் செப்புவர் வானிலை !
வானிலை மாறுதல் அறிந்தவர்
வாக்கினில் உண்மையை உரைப்பவர்
வானிலை நிபுணராய் வாழ்பவர்
வாழ்வினில் சேவையைச் செய்பவர்
மானிடர் காவலர் ஆனவர்
மாபெரும் உதவியாய் இருப்பவர்
தேனினைச் சொரிந்திடும் தீந்தமிழ்
தென்றலாய் வருடி வாழ்த்துகள்!
இன்று வானிலை அறிவியல் நிபுணர்கள் தினம் என்றமையால் கவிதை பிறந்தது.
நன்றி வணக்கம்
Author: arunwebhosting@gmail.com
Related Post
உயிர்மெய்யாய்….
வசந்தா ஜெகதீசன் உயிர்மெய்யாய்… மொழிக்கு முதலானது முழுமைக்கு நிகரானது உயிர்ப்பில் உலகானது உயிராமெய்யே வேரானது வாழ்வின் தடமானது வரலாற்று மொழியானது [...]
“புதையுண்ட மலையகம்”
நேவிஸ் பிலிப் கவி இல(562) தெரிகின்ற தூரமும் தொடுகின்ற வானமும் பணிந்து வந்த அந்த வானத்தை காண விரைந்த என்மனம் [...]
பூம்பனி கொட்டுது
நகுலா சிவநாதன் பூம்பனி கொட்டுது பூம்பனி கொட்டுது புழுதியில் வீழ்குது தேம்பியே அழுகுது வானம் வானமும் கறுக்குது வையகம் பொழியுது [...]
