உயிர்மெய்யாய்….
வசந்தா ஜெகதீசன்
உயிர்மெய்யாய்…
மொழிக்கு முதலானது
முழுமைக்கு நிகரானது
உயிர்ப்பில் உலகானது உயிராமெய்யே வேரானது
வாழ்வின் தடமானது
வரலாற்று மொழியானது
தகமை பலமானது
தாய்மொழியாய் உறவானது
மூத்த தமிழாய் முதல்மொழியாய்
தரணி தனை ஆள்வது
குமரியில் உருவானது
குவலயத்தில் நிலையானது
எதுகை மோனை ஓன்றி
கவிதை வடிவானது
கனிவில் தமிழாகிடும்
தொடர்பில் உறவாகிடும்
தொன்மை நிறைந்த தமிழ்
இலக்கிய நயமானது
இலக்கண வலுவானது
இதுவின்றி எதுவாகிடும்
இன்னுயிராய் உயிர்மெய்யாய்
எம்மோடு வாழ்வாகுமே
இன்தமிழ் உலகாளுமே!
நன்றி மிக்க நன்றி
Author: arunwebhosting@gmail.com
Related Post
” செம்மொழியாம் எம்தமிழ் “
ரஜனி அன்ரன் (B.A) ” செம்மொழியாம் எம்தமிழ் ” 19.02.2026 அன்னைத் தமிழே அருமருந்தே அமுதத் தமிழாய் மலர்ந்தவளே முன்னைத் [...]
நெல்லு வயல் காடு
வயிதா முகமட் நெல்லு வயல் காடு நீஎனக்கு சோறு தங்கம் வாழ்வுக்கு வறுமை தீர்து வயிற்றுக்கு பசிதீர்து காற்றோடு கதைபேசி [...]
மாசி திங்கள்
வியாழன் கவி 2292 மாசி திங்கள்.. மாசித் திங்கள் மனதோரம் சாரல் மனதை வருடும் நாட்களின் சேரல் குறுகிய காலத்தின் [...]
