அமைதியின் முகவடிவமே
மகிழ்ச்சியின் விளைவாக இது
உணர்வுகளை கடந்த
அறிவின் நிலை அது
வெளிப்புற நிகழ்வுகளால்
உருவாகாது
உள்ளார்ந்த தெளிவால்
பிறக்கிறது
அமைதியின் முகவடிவமே இது
இதை தெரிந்தவன்
முதிர்ந்த மனிதன்
தன்னை காத்துக் கொள்பவன்
இதை கொள்வான்
மனிதனை
உள்ளார்ந்து சிதையாமல்
காப்பது இது
இது மனிதனின் மாபெரும் ஆற்றல்
வாழ்க்கையை
ஏற்றுக்கொண்டவனின்
தீர்மானம்
தன் மனநிலை தன்வசம் கொண்டவனே இதை செய்வான்
இது ஒரு புரிதலின் சின்னம்
வாழ்க்கையிடம்
மனிதன் சொல்லும்
மௌனமான சம்மதம்
நம்பிக்கையற்ற தருணத்திலும்
வாழ்வை விடாத
உயிரின் பிடிவாதம்
இதை தெரிந்தவன் என்பதே
அவன் துன்பத்தை
ஆளத் தெரிந்தவன்
என்பதற்கான சாட்சி
ஜெயம்
05-02-2026
Author: arunwebhosting@gmail.com
Related Post
கலந்து விட்ட உண்மைகள்
ராணி சம்பந்தர் பாதியைப் பாதியான மீதி தேடுது பிறப்பிலும் இறப்புச் சேதி கூடுது பிறந்தது ஒன்று இரண்டு ஆகுதே அறக்கப்பறக்க [...]
உயிரான உறவு…..
இரா.விஜயகௌரி வைகறைகள் உயிர்ப்பெழுதும் வனப்பு மிக்க விடியலுக்கு தினமெழுதும் மொழிப்புனலாய் கனவெழுதும் தேவதை இவள் தன்வலியை தான் மறப்பாள் உதிரத்துள் [...]
நினைவின் ஓரத்தில்..
வியாழன் கவி 2284!! நினைவுகளின் ஓரத்தில்..!! மறத்தல் அரியதாய் மனதிலே இறத்தல் வரை தொடரலாம் கரையும் பனியின் வீரியமோ கலந்தால் [...]
