புரிய முயலாதே 1
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும் இன்று நிகழ்கின்றது
சுகம் வந்தால் நிரந்தரமென நம்பி
துயரம் நுழைகையில் ஏனென வெம்பி
இரண்டுங்கெட்டான் நிலையில் நாட்கள்
பிடிக்கமுடியாமல் நீராக வழிகின்றன
வந்த பாதை தெரியாத போது
போகும் பாதை தெரிவதும்தான் ஏது
முடிவில்லா ஒரு நீண்ட பயணமாக
விழுந்தாலும் எழுந்து நடக்க
சொல்லித் தருகுது காலம்
ஜெயம்
Author: arunwebhosting@gmail.com
Related Post
உயிரான உறவு..
வியாழன் கவி 2288 உயிரான உறவு.. உதிரத்தில் உணவூட்டி உணர்வுக்குள் அன்பேந்தி உலகுக்கு வழிகாட்டியவள் உயிரான உறவானாள்.. கருவினுக்கு காரணியாய் [...]
நினைவின் ஓரத்தில்..
வியாழன் கவி 2284!! நினைவுகளின் ஓரத்தில்..!! மறத்தல் அரியதாய் மனதிலே இறத்தல் வரை தொடரலாம் கரையும் பனியின் வீரியமோ கலந்தால் [...]
உயிரான உறவே…….
ரஜனி அன்ரன் ( B.A) உயிரான உறவே….. 12.02.2026 அறிமுகமில்லாத் தேடலின் ஆத்மார்த்தம் இசையோடுகலவி இசைவால் உயிராகிய உறவே உணர்வினில் [...]
