பூம்பனி கொட்டுது


நகுலா சிவநாதன்
பூம்பனி கொட்டுது

பூம்பனி கொட்டுது புழுதியில் வீழ்குது
தேம்பியே அழுகுது வானம்
வானமும் கறுக்குது வையகம் பொழியுது
வண்ணமாய் இருக்குது காலை

நிறைபனி பொழியுது நிலமும் மூடுது
நீண்ட நேரம் இருளாக
வெள்ளையாய் கொட்டுது வெண்பனிச்சரால்
துள்ளியே மகிழுது தூரத்து விடியல்

அள்ளியே கையில் வைத்திட நாமும்
அகன்று செய்லுது பனியின் துகள்கள்;
கிள்ளி எறிந்திடும் மாணவமணிகளும்
துள்ளி விளையாடுவர் தூசிப்பனியில்

இயற்கையின் விந்தை இதுவென நாமும்
இணைந்து வாழ்தல் நலமன்றோ!
முயற்சியைக் கூட்டி முனைந்து நீயும்
முன்பனிக் காலை விடியலைப் பாரு!!

நகுலா சிவநாதன்1843

கருத்துக்களை பதிவிடுக