” செம்மொழியாம் எம்தமிழ் “
ரஜனி அன்ரன் (B.A) ” செம்மொழியாம் எம்தமிழ் ” 19.02.2026
அன்னைத் தமிழே அருமருந்தே
அமுதத் தமிழாய் மலர்ந்தவளே
முன்னைத் தவத்தின்பயனாக
கன்னித் தமிழாய் கனிந்தவளே
உன்னைப் போற்றிப் பணிகின்றேன்
உலகின் முதல்மொழி நீதானே !
வள்ளுவன் வழியில் வாழ்வியல்தமிழாய்
கம்பன் கணிப்பில் காவியத்தமிழாய்
பாரதி நடையில் புதுமைத்தமிழாய்
பாரதிதாசன் வழியில் புரட்சித்தமிழாய்
இளங்கோவின் இலக்கில் இலக்கியத்தமிழாய்
இரண்டறக் கலந்த செம்மொழியே நீவாழி !
அன்னைத்தமிழின் சிறப்பினை
அளவிட வார்த்தைகள் கிடையாதே
இளமை புதுமை தொன்மை மிகுந்த
இனிமைத் தமிழே – உனை
மூச்சாய் கொண்டோம் பேச்சாய் கொண்டோம்
எத்தனை மொழிகள் தான்இருந்தாலும்
செம்மொழியாம் உந்தனுக்கு ஈடாகுமா ?
Author: ரஜனி அன்ரன்
Related Post
கலந்து விட்ட உண்மைகள்
ராணி சம்பந்தர் பாதியைப் பாதியான மீதி தேடுது பிறப்பிலும் இறப்புச் சேதி கூடுது பிறந்தது ஒன்று இரண்டு ஆகுதே அறக்கப்பறக்க [...]
” சுதந்திரம் “
ரஜனி அன்ரன் (B.A) ” சுதந்திரம் ” 05.02.2026 சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை அதுவே ஒவ்வொரு மனிதனதும் பிறப்புரிமை [...]
உனை உணராதிருக்கிறாய்
இரா.விஜயகௌரி மெல்லப் பேசும் சின்ன வரிகளுள் சிதறாமல் பதறாமல் மெல்ல உந்தனை வழுவாத வாழ்வுப் பாதையில் நழுவாமல் செல்வதற்காய் அழைக்கிறேன் [...]
