உயிரான உறவே-2153 ஜெயா நடேசன்
பத்து மாதங்கள் பத்திரமாய் சுமந்து
குழந்தையின் முகத்தை பார்ப்பாள்
பிரசவித்த வேதனையும் மறப்பாள்
உதிரத்தை பாலாக்கி ஊட்டி மகிழ்வாள்
மடியை தொட்டிலாக்கி அணைத்து
காலை நீட்டி படுக்கையாக்கி
பிள்ளளைகளை தாலாட்டி சீராட்டி
ஆராரோ சொல்லி தூங்க வைப்பாள்
எட்டி காலால் உதைக்கும்போது
உதைக்கும் காலை தூக்கி முத்தமிடுவாள்
என் எண்ணங்களில் ஊறியவள் அன்னையே
என் சிந்தனைகளுக்கு சித்திரமாய்
என் பாதைகளை அமைத்து தந்தவள் அம்மா
என் உயிரான உயிரே உங்களை பிரிந்து
காலங்கள் பல ஆணடுகள் சென்றாலும்
அம்மாவின் உயிர் என்றும் ஆழமானது
என் உள்ளமதில் என்றும் இருப்பீர்கள்
Author: arunwebhosting@gmail.com
Related Post
உயிரான உறவு..
வியாழன் கவி 2288 உயிரான உறவு.. உதிரத்தில் உணவூட்டி உணர்வுக்குள் அன்பேந்தி உலகுக்கு வழிகாட்டியவள் உயிரான உறவானாள்.. கருவினுக்கு காரணியாய் [...]
உயிரான உறவு
செல்வி நித்தியானந்தன் உயிரான உறவு உயிருக்குள் கருவாகி உதிரத்துள் சுமையாகி உவகையில் இணைவாகி உள்ளமதில் கொள்ளை கொண்ட தாய்அவரே உலகைவிட்டு [...]
பாடுபடு!
நகுலா சிவநாதன் பாடுபடு! அன்பும் பண்பும் குணமாகும் அதுவே அகத்தின் அழகாகும் இன்பம் என்றும் இதமாகும் இதுவே மகிழ்வின் அடையாளம் [...]
