உயிரான உறவே-2153 ஜெயா நடேசன்
பத்து மாதங்கள் பத்திரமாய் சுமந்து
குழந்தையின் முகத்தை பார்ப்பாள்
பிரசவித்த வேதனையும் மறப்பாள்
உதிரத்தை பாலாக்கி ஊட்டி மகிழ்வாள்
மடியை தொட்டிலாக்கி அணைத்து
காலை நீட்டி படுக்கையாக்கி
பிள்ளளைகளை தாலாட்டி சீராட்டி
ஆராரோ சொல்லி தூங்க வைப்பாள்
எட்டி காலால் உதைக்கும்போது
உதைக்கும் காலை தூக்கி முத்தமிடுவாள்
என் எண்ணங்களில் ஊறியவள் அன்னையே
என் சிந்தனைகளுக்கு சித்திரமாய்
என் பாதைகளை அமைத்து தந்தவள் அம்மா
என் உயிரான உயிரே உங்களை பிரிந்து
காலங்கள் பல ஆணடுகள் சென்றாலும்
அம்மாவின் உயிர் என்றும் ஆழமானது
என் உள்ளமதில் என்றும் இருப்பீர்கள்
Author: arunwebhosting@gmail.com
Related Post
உயிர்மெய்யாய்….
வசந்தா ஜெகதீசன் உயிர்மெய்யாய்… மொழிக்கு முதலானது முழுமைக்கு நிகரானது உயிர்ப்பில் உலகானது உயிராமெய்யே வேரானது வாழ்வின் தடமானது வரலாற்று மொழியானது [...]
” சுதந்திரம் “
ரஜனி அன்ரன் (B.A) ” சுதந்திரம் ” 05.02.2026 சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை அதுவே ஒவ்வொரு மனிதனதும் பிறப்புரிமை [...]
புனித ரமலானே வ௫க
வஜிதா முகமட் புனித ரமலானே வ௫க இறை அ௫ளை அள்ளித்த௫ம் மாதம் இரவு பகல் படைத்தவனை போற்றி வணங்கியி௫க்கும் நேரம் [...]
