உயிரான உறவு…..
இரா.விஜயகௌரி
வைகறைகள் உயிர்ப்பெழுதும்
வனப்பு மிக்க விடியலுக்கு
தினமெழுதும் மொழிப்புனலாய்
கனவெழுதும் தேவதை இவள்
தன்வலியை தான் மறப்பாள்
உதிரத்துள் உறவு சொல்வாள்
கானகத்து பயிர் செழிக்க
கண் இமைக்குள் பூட்டி வைப்பாள்
வித்தகத்தை தினம் நிறைப்பாள்
விளைபயிரை செழிக்க வைப்பாள்
பண்பினையே தன் வாழ்வாய்- நாம்
பழகியெழ உணர்விடுவாள்
சிந்தனைக்குள் செப்பி எழும்
வேதமிவள் வார்த்தை இழை
அன்னையிவள் அகத்தினுள்ளே
விதைத்து எழுத் வியப்பின்மொழி
Author: arunwebhosting@gmail.com
Related Post
வானிலை நிபுணருக்கு வாழ்த்து
சக்தி சிறினிசங்கர் அறுசீர் விருத்தம் சீர் வரையறை: விளம் விளம் விளம்/ விளம் விளம் விளம் அறிவியல் ஆர்வலர் உலகினை [...]
அமைதியின் முகவடிவமே
மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் [...]
” சுதந்திரம் “
ரஜனி அன்ரன் (B.A) ” சுதந்திரம் ” 05.02.2026 சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை அதுவே ஒவ்வொரு மனிதனதும் பிறப்புரிமை [...]
