பாடுபடு!
நகுலா சிவநாதன்
பாடுபடு!
அன்பும் பண்பும் குணமாகும்
அதுவே அகத்தின் அழகாகும்
இன்பம் என்றும் இதமாகும்
இதுவே மகிழ்வின் அடையாளம்
துன்பம் என்றும் அகற்றிவிடு
துணிவை என்றும் வரமாக்கு
வென்று வாழ்வைச் செழிப்பாக்கு
வெற்றி என்றும் உனதாகும்
காடும் மேடும் வளமாக்கு
காசை கொடுத்து பயிராக்கு
வீடும் நாடும் விளைவித்து
விதையைப் போட்டு உரமாக்கு
தேடும் தேடல் விதையாக்கு!
தேட்டம் என்றும் வரமாக்கு
ஓடும் முயற்சி வென்றிடவே
ஓயா அலையாய்ப் பாடுபடு!
நகுலா சிவநாதன் 1841
Author: arunwebhosting@gmail.com
Related Post
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை நெஞ்சினிலே என்றும் வெள்ளைமனசு [...]
” செம்மொழியாம் எம்தமிழ் “
ரஜனி அன்ரன் (B.A) ” செம்மொழியாம் எம்தமிழ் ” 19.02.2026 அன்னைத் தமிழே அருமருந்தே அமுதத் தமிழாய் மலர்ந்தவளே முன்னைத் [...]
உயிர்மெய்யாய்….
வசந்தா ஜெகதீசன் உயிர்மெய்யாய்… மொழிக்கு முதலானது முழுமைக்கு நிகரானது உயிர்ப்பில் உலகானது உயிராமெய்யே வேரானது வாழ்வின் தடமானது வரலாற்று மொழியானது [...]
