உயிரான உயிரே
ராணி சம்பந்தர்
பயிருக்கு மண் சொந்தம்
உயிருக்குக் கண்ணான
கணவன் மனைவி பந்தம்
மெய்யான இன்பம் வேலி
பொய்யான துன்பம் போலி
உய்த்தறிந்தால் அது ஜாலி
யாருக்கு யார் சேரும் என்பது
எவருக்கு எவர் தேறும் எதுவும்
அவரவர் விதியின் பதி கூறும்
சதியின் விளையாட்டு சித்தி பெற
அன்பு ,பொறுமை ,புரிந்துணர்வும்,
விட்டுக்கொடுப்பும் இருப்பின் பயிர்
பட்டுப்போகாது வளர்வது போல
வாழ்வும் வளம்பெற்று ஒன்றித்து
வளர உயிரான உறவு உன்னதத்
திறவு கோலாகுமே பிரிவின்றி .
Author: arunwebhosting@gmail.com
Related Post
புனித ரமலானே வ௫க
வஜிதா முகமட் புனித ரமலானே வ௫க இறை அ௫ளை அள்ளித்த௫ம் மாதம் இரவு பகல் படைத்தவனை போற்றி வணங்கியி௫க்கும் நேரம் [...]
மாசி திங்கள்
வியாழன் கவி 2292 மாசி திங்கள்.. மாசித் திங்கள் மனதோரம் சாரல் மனதை வருடும் நாட்களின் சேரல் குறுகிய காலத்தின் [...]
நினைவின் ஓரத்தில்..
வியாழன் கவி 2284!! நினைவுகளின் ஓரத்தில்..!! மறத்தல் அரியதாய் மனதிலே இறத்தல் வரை தொடரலாம் கரையும் பனியின் வீரியமோ கலந்தால் [...]
