“அன்பின் வழியினிலே”
நேவிஸ் பிலிப் கவி இல(563)
அன்பின் வழியில் நடந்திட்டால்
ஆயிரம் நன்மை கூடி வரும்
இறையருள் ஒன்றே நாடி நின்றால்
ஈடில்லா பேரின்பம் கோடி பெறும்
அன்பென்ற பண்பொன்றே
பலத்தைக் கூட்டும்
மாந்தர்க்கு பயன் கருதா
செயல்பாடே மனதிலோங்கும்
புரிதலில் செழிக்குமன்பு
மன்னிப்பில் மலர்ந்து நிற்கும்
கொடுப்பதில் மனம் மகிழ்ந்து
பொறுப்பதில் பெருமை கொள்ளும்
வேதனை துன்பம் வெறுப்பின்றி
மேலான நல் வாழ்வு வாழ்வதற்கே
போதனைகள் நன்நெறிகள் மனதிலேற்று
இறையன்பை உணர்ந்து இன்புற்று
அன்பொன்றே மேலாக கொண்டிடுவோம்
மேதினியில் மேன்மை பெற்றே வாழ்ந்திடுவோம்
அன்பென்னும் விதையை விதைத்திடுவோம்
அன்பையே நாளும் வளரத்தெடுப்போம்…..
அன்புடன் நன்றி ………
Author: arunwebhosting@gmail.com
Related Post
உயிரான உயிரே
ராணி சம்பந்தர் பயிருக்கு மண் சொந்தம் உயிருக்குக் கண்ணான கணவன் மனைவி பந்தம் மெய்யான இன்பம் வேலி பொய்யான துன்பம் [...]
உனை உணராதிருக்கிறாய்
இரா.விஜயகௌரி மெல்லப் பேசும் சின்ன வரிகளுள் சிதறாமல் பதறாமல் மெல்ல உந்தனை வழுவாத வாழ்வுப் பாதையில் நழுவாமல் செல்வதற்காய் அழைக்கிறேன் [...]
புரிய முயலாதே 1
நேற்று என்பது நினைவோடு மட்டும் நாளை என்பது கற்பனையாக சொட்டும் உண்மை மட்டும் இன்று நிகழ்கின்றது சுகம் வந்தால் நிரந்தரமென [...]
