“அன்பின் வழியினிலே”
நேவிஸ் பிலிப் கவி இல(563)
அன்பின் வழியில் நடந்திட்டால்
ஆயிரம் நன்மை கூடி வரும்
இறையருள் ஒன்றே நாடி நின்றால்
ஈடில்லா பேரின்பம் கோடி பெறும்
அன்பென்ற பண்பொன்றே
பலத்தைக் கூட்டும்
மாந்தர்க்கு பயன் கருதா
செயல்பாடே மனதிலோங்கும்
புரிதலில் செழிக்குமன்பு
மன்னிப்பில் மலர்ந்து நிற்கும்
கொடுப்பதில் மனம் மகிழ்ந்து
பொறுப்பதில் பெருமை கொள்ளும்
வேதனை துன்பம் வெறுப்பின்றி
மேலான நல் வாழ்வு வாழ்வதற்கே
போதனைகள் நன்நெறிகள் மனதிலேற்று
இறையன்பை உணர்ந்து இன்புற்று
அன்பொன்றே மேலாக கொண்டிடுவோம்
மேதினியில் மேன்மை பெற்றே வாழ்ந்திடுவோம்
அன்பென்னும் விதையை விதைத்திடுவோம்
அன்பையே நாளும் வளரத்தெடுப்போம்…..
அன்புடன் நன்றி ………
Author: arunwebhosting@gmail.com
Related Post
உயிரான உறவு
இல 77 உயிரான உறவு நாம் பிறந்ததிலிருந்து முதல் முதல் வந்த உயிரான உறவு எமது பெற்றோர்களே அன்பும் பாதுகாப்பும் [...]
நெல்லு வயல் காடு
வயிதா முகமட் நெல்லு வயல் காடு நீஎனக்கு சோறு தங்கம் வாழ்வுக்கு வறுமை தீர்து வயிற்றுக்கு பசிதீர்து காற்றோடு கதைபேசி [...]
உயிரான உறவே…….
ரஜனி அன்ரன் ( B.A) உயிரான உறவே….. 12.02.2026 அறிமுகமில்லாத் தேடலின் ஆத்மார்த்தம் இசையோடுகலவி இசைவால் உயிராகிய உறவே உணர்வினில் [...]
