” சுதந்திரம் “
ரஜனி அன்ரன் (B.A) ” சுதந்திரம் ” 05.02.2026
சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை
அதுவே ஒவ்வொரு மனிதனதும் பிறப்புரிமை
சுதந்திரமென்பது வெறும் உரிமையல்ல
அதுஒவ்வொரு தனிமனிதனின் பொறுப்புரிமை
தடையின்றி வாழும் முழுமையான உரிமையே
உண்மையான சுதந்திரம் !
தலை நிமிர்ந்து நடந்து
தவறுகளைத் தட்டிக் கேட்டு
தனிமனித எண்ணம் சிந்தனை செயற்பாடுகளோடு
பிறரின் உரிமையையும் மதித்து
ஒளியாய் வாழ்தலே சுதந்திரம் !
தேசம் பெற்ற சுதந்திரம்
நேசமான வரலாற்றின் பக்கமென்றால்
மனம்பெறும் சுதந்திரம் மகத்துவமானதே
சுதந்திரம் என்பது காற்றைப் போன்றதே
நாம்அனுபவிக்கும் இந்த சுதந்திரம்
பலரின் இரத்தத்தாலும் வியர்வையாலும் கிடைத்ததுவே
அதனைப்போற்றிப் பாதுகாப்போம் !
Author: ரஜனி அன்ரன்
Related Post
தருவாய் தளிராய்…
வசந்தா ஜெகதீசன் தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும் தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும் பருவ எழிலில் பண்பட்டு வாழும் தருவே [...]
புரிய முயலாதே 2
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு வாழ்க்கை அதை புரிய முயலவில்லை ஆனால் அதன் ஆழத்துள் மூழ்கி வெளிவந்திருக்கின்றேன் அது அனுபவிக்க வேண்டிய ஒரு [...]
“அன்பின் வழியினிலே”
நேவிஸ் பிலிப் கவி இல(563) அன்பின் வழியில் நடந்திட்டால் ஆயிரம் நன்மை கூடி வரும் இறையருள் ஒன்றே நாடி நின்றால் [...]
