உயிரான உறவு
நகுலா சிவநாதன்
உயிரான உறவு
உயிரான காதல் உளத்துக்காதல்
பயிராக வளரும் பண்பாட்டுக்காதல்
நிலவாக உலவும் நித்தியக் காதல்
நீண்டு நெடிதுயர்ந்து ஓங்கும் காதலிது
உள்ளத்து உணர்வுகளில் எழுந்த காதல்
வெள்ளமாய்ப் பெருகிய அந்தக்காதல்
பள்ளம் மேடு பார்க்காமல் ஓடியகாதல்
பாய்ந்து மனமோங்கிய பரிவானகாதலிது
மாலைக் காற்றின் மனதோரம் வந்தகாதல்
மனசு தொட்ட ஊமைக்காதல் இது
கள்ளமில்லா கருணை உடையவன் காதல்
கன்னித் தெய்வமே அம்மா உன்மேல் கொண்டகாதல்
நகுலா சிவநாதன் 1842
Author: arunwebhosting@gmail.com
Related Post
மாசி திங்கள்
வியாழன் கவி 2292 மாசி திங்கள்.. மாசித் திங்கள் மனதோரம் சாரல் மனதை வருடும் நாட்களின் சேரல் குறுகிய காலத்தின் [...]
உயிரான உறவு..
வியாழன் கவி 2288 உயிரான உறவு.. உதிரத்தில் உணவூட்டி உணர்வுக்குள் அன்பேந்தி உலகுக்கு வழிகாட்டியவள் உயிரான உறவானாள்.. கருவினுக்கு காரணியாய் [...]
“உயிரான உறவே”
நேவிஸ் பிலிப் இல்(563) உயிரான உறவாக இறை என்பேனா மறை என்பேனா அன்னை என்பேனா தந்தை என்பேனா தாயுமானவன் என்பேனா [...]
