என்னவென புரியவில்லை
செல்வி.நித்தியானந்தன்
என்னவென புரியவில்லை
ஏன்எனக்கு இப்படி
என்னவெனபுரியவில்லை
என்நேரம் சரியில்லையா
புரிந்து கொள்ளவே
முடியவில்லை
காலநிலை மாற்றம்
தொடர் மழையாகவும்
வெயிலாகவும் மாறவே
ஏழரைசனி பிடித்ததுவா
ஏழுநாள் படுக்கை
இரண்டு நாள் ஓய்வு
முடியவில்லை என்னால் புரியவில்லை
வெளியில் போவதுமில்லை
வீட்டுக்குள் கோழி
அடைபடுத்த கோழியாய்
இரண்டு வாரம்
மின்னல் வேகத்தில்
பறக்கனும்
இனி இறைவன்
எழுதிய விதி
மூச்சுக்கு மூச்சு
பிள்ளையின் நினைவு
முழுமதி போல்
அவன் முகம்
மூச்சுக்குள்ளே முழு
வண்ணமாய்.
செல்வி.நித்தியானந்தன்
Author: arunwebhosting@gmail.com
Related Post
தருவாய் தளிராய்…
வசந்தா ஜெகதீசன் தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும் தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும் பருவ எழிலில் பண்பட்டு வாழும் தருவே [...]
அமைதியின் முகவடிவமே
மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் [...]
புரிய முயலாதே 2
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு வாழ்க்கை அதை புரிய முயலவில்லை ஆனால் அதன் ஆழத்துள் மூழ்கி வெளிவந்திருக்கின்றேன் அது அனுபவிக்க வேண்டிய ஒரு [...]
