தருவாய் தளிராய்…
வசந்தா ஜெகதீசன்
தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும்
தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும்
பருவ எழிலில் பண்பட்டு வாழும்
தருவே புவியைத் தாங்கிடும் சக்தி
தருமே மழையை புவியீர்ப்பு சுழற்சி
தளிராய் இலையாய் சருகாய் உதிரும்
பருவச் சுழற்சியில் பயனை விதைக்கும்
எழிலில் நிறைக்கும் இயற்கைப் புவியை
மண்ணின் வளத்தை காத்திடும்
மகிமை
நிழலாய் நிறைக்கும் கனியாய் காயாய் கரிசனை பலவாய்
விறகாய் மரமாய் விதவிதமாகும் தளபாடப் பயனாய்
தருவின் கொடைகள் தரணிக்கு மகுடம்
தருமே பற்பல பாடங்கள் வாழ்வில்
ஏற்றே என்றும் ஒரு மரம் நாட்டு
எதிர்காலம் ஒளிரவழியினைச் சாற்று
வெட்டு மரத்தை வீழ்த்தும் முன்யோசி!கோடரிக்காம்பாய் வீழ்த்துதல்தவிர்ப்போம்.நன்றி
Author: arunwebhosting@gmail.com
Related Post
உயிரான உறவு…..
இரா.விஜயகௌரி வைகறைகள் உயிர்ப்பெழுதும் வனப்பு மிக்க விடியலுக்கு தினமெழுதும் மொழிப்புனலாய் கனவெழுதும் தேவதை இவள் தன்வலியை தான் மறப்பாள் உதிரத்துள் [...]
உயிரான உறவு
செல்வி நித்தியானந்தன் உயிரான உறவு உயிருக்குள் கருவாகி உதிரத்துள் சுமையாகி உவகையில் இணைவாகி உள்ளமதில் கொள்ளை கொண்ட தாய்அவரே உலகைவிட்டு [...]
உயிரான உறவு
இல 77 உயிரான உறவு நாம் பிறந்ததிலிருந்து முதல் முதல் வந்த உயிரான உறவு எமது பெற்றோர்களே அன்பும் பாதுகாப்பும் [...]
