உயிரான உயிரே
உயிரான உயிரே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நினைவிலே சிலையாக வைத்தேன் உன்னை
நீங்காத உயிராய் உயிரானாய் நீயும்
ஆருயிரே ஆனந்தப் பூங்காற்றின் ஓசையாய்
என்னகம் புகுந்தவா ஏற்றமாய் வழிவகுத்தவா
முன்னைய தவப்பயன் உனையே அடைந்தது
இன்முகம் கண்டதும் இன்பமே பொங்குமே
அன்பாலே என்னை அரவணைத்த காதலனே
இன்னொரு பிறவியிலும் நீதான் கணவன்
மதிப்பும் மாண்பும் மலர்ந்த முகமும்
மதியின் ஒளியாய் வீசும் அழகும்
விதியே உன்னை வாழ்த்தியே நிற்பேன்
கருணையும் நிறைந்தவரை காலமெல்லாம் வாழவைப்பாய்
சிவரூபன் சர்வேஸ்வரி
Author: arunwebhosting@gmail.com
Related Post
நினைவின் ஓரத்தில்..
வியாழன் கவி 2284!! நினைவுகளின் ஓரத்தில்..!! மறத்தல் அரியதாய் மனதிலே இறத்தல் வரை தொடரலாம் கரையும் பனியின் வீரியமோ கலந்தால் [...]
வானிலை நிபுணருக்கு வாழ்த்து
சக்தி சிறினிசங்கர் அறுசீர் விருத்தம் சீர் வரையறை: விளம் விளம் விளம்/ விளம் விளம் விளம் அறிவியல் ஆர்வலர் உலகினை [...]
உயிரான உறவு…..
இரா.விஜயகௌரி வைகறைகள் உயிர்ப்பெழுதும் வனப்பு மிக்க விடியலுக்கு தினமெழுதும் மொழிப்புனலாய் கனவெழுதும் தேவதை இவள் தன்வலியை தான் மறப்பாள் உதிரத்துள் [...]
