“உயிரான உறவே”
நேவிஸ் பிலிப் இல்(563)
உயிரான உறவாக
இறை என்பேனா
மறை என்பேனா
அன்னை என்பேனா
தந்தை என்பேனா
தாயுமானவன் என்பேனா
பத்து மாதம் சுமந்து பெற்று
குருதியை பாலாயூட்டி
அன்பாய் வளர்த்தெடுத்த
என் அம்மா
தோளிலே எனை சுமந்து
மனதிலே நேசம் வைத்த அப்பா
கண்டிப்பும் காட்டிடுவார்
விகடமாய் பேசிடுவார்
வாழ்வின் வரமாய் வந்தார்
கையோடு கையிணைத்தோம்
அன்பிற்கும் பஞ்சமில்ல
ஆசைக்கும் குறைவேயில்லை
உயிரான உறவுகளாய்
கூடியே வாழ்கின்றோம்
வம்சங்கள் தளைத்திடவே
பந்தங்கள் பெருகிடவே
இறை துணை கூடிடுமே
வரமே வேண்டிடுவோம்
நன்றி
Author: arunwebhosting@gmail.com
Related Post
௨யிரான காதல்
வஜிதா முஹம்மட் ௨யிரான காதல் க௫வுக்குள் ௨யிராகி க௫ணைக்குள் நிஜமாகி வலிகளை வரமாக்கி ௨யி௫க்குள் ௨றவு தாயே மூச்சு முட்டும் [...]
உனை உணராதிருக்கிறாய்
இரா.விஜயகௌரி மெல்லப் பேசும் சின்ன வரிகளுள் சிதறாமல் பதறாமல் மெல்ல உந்தனை வழுவாத வாழ்வுப் பாதையில் நழுவாமல் செல்வதற்காய் அழைக்கிறேன் [...]
” செம்மொழியாம் எம்தமிழ் “
ரஜனி அன்ரன் (B.A) ” செம்மொழியாம் எம்தமிழ் ” 19.02.2026 அன்னைத் தமிழே அருமருந்தே அமுதத் தமிழாய் மலர்ந்தவளே முன்னைத் [...]
