“உயிரான உறவே”
நேவிஸ் பிலிப் இல்(563)
உயிரான உறவாக
இறை என்பேனா
மறை என்பேனா
அன்னை என்பேனா
தந்தை என்பேனா
தாயுமானவன் என்பேனா
பத்து மாதம் சுமந்து பெற்று
குருதியை பாலாயூட்டி
அன்பாய் வளர்த்தெடுத்த
என் அம்மா
தோளிலே எனை சுமந்து
மனதிலே நேசம் வைத்த அப்பா
கண்டிப்பும் காட்டிடுவார்
விகடமாய் பேசிடுவார்
வாழ்வின் வரமாய் வந்தார்
கையோடு கையிணைத்தோம்
அன்பிற்கும் பஞ்சமில்ல
ஆசைக்கும் குறைவேயில்லை
உயிரான உறவுகளாய்
கூடியே வாழ்கின்றோம்
வம்சங்கள் தளைத்திடவே
பந்தங்கள் பெருகிடவே
இறை துணை கூடிடுமே
வரமே வேண்டிடுவோம்
நன்றி
Author: arunwebhosting@gmail.com
Related Post
உயிரான உறவே…
வசந்தா ஜெகதீசன் உயிரான உறவே… வெற்றி மிகு வாழ்வில் வீறு கொள்ளும் சிந்தை பற்றியே படர்கின்ற பாதையின் செதுக்கல் பாசமுடன் [...]
உயிர்மெய்யாய்….
வசந்தா ஜெகதீசன் உயிர்மெய்யாய்… மொழிக்கு முதலானது முழுமைக்கு நிகரானது உயிர்ப்பில் உலகானது உயிராமெய்யே வேரானது வாழ்வின் தடமானது வரலாற்று மொழியானது [...]
ஒழுக்கம்
இல 76 தலைப்பு = ஒழுக்கம் ஒழுக்கம் உயிரை விட மேலானது ஒழுக்கம் இல்லாதவர் வாழ்க்கையில் நன்மைகளை காண முடியாது [...]
