கலந்து விட்ட உண்மைகள்


ராணி சம்பந்தர்

பாதியைப் பாதியான மீதி தேடுது
பிறப்பிலும் இறப்புச் சேதி கூடுது
பிறந்தது ஒன்று இரண்டு ஆகுதே

அறக்கப்பறக்க ஓடி ஓடியே நாடி
உழைத்து நல் வாழ்வு தொலைய
இன்பம் இதுவென்ற துன்ப துயரம்

பெற்றோர் இரவு பகலின்றி மௌனம்
ஒருவரோடொருவர் உரையாடி மகிழ
இளமை போலின்றியே கொதிக்குது

நாடி வந்த இடமோ எல்லாமிருந்தும்
இல்லாதது போலவே துடி துடிக்குது
பழையது சொல்லி பிறந்த மண்
பறந்து பறந்து வாய் பிதற்றுது

பாசத்தோடு வளர்த்த பிள்ளைகள்
படிப்பு படிப்பு என்று பிரிந்து ஓடுது
பாசத்தோடு இருந்த வேலையோ
அப்பவோ இப்பவோ என்றே
அலைச்சலிட உருக்குலைந்த
உணர்வு உயிரற்ற சடலமானது .

அலைச்சல் கொடுக்க

கருத்துக்களை பதிவிடுக