அமைதியின் முகவடிவமே
மகிழ்ச்சியின் விளைவாக இது
உணர்வுகளை கடந்த
அறிவின் நிலை அது
வெளிப்புற நிகழ்வுகளால்
உருவாகாது
உள்ளார்ந்த தெளிவால்
பிறக்கிறது
அமைதியின் முகவடிவமே இது
இதை தெரிந்தவன்
முதிர்ந்த மனிதன்
தன்னை காத்துக் கொள்பவன்
இதை கொள்வான்
மனிதனை
உள்ளார்ந்து சிதையாமல்
காப்பது இது
இது மனிதனின் மாபெரும் ஆற்றல்
வாழ்க்கையை
ஏற்றுக்கொண்டவனின்
தீர்மானம்
தன் மனநிலை தன்வசம் கொண்டவனே இதை செய்வான்
இது ஒரு புரிதலின் சின்னம்
வாழ்க்கையிடம்
மனிதன் சொல்லும்
மௌனமான சம்மதம்
நம்பிக்கையற்ற தருணத்திலும்
வாழ்வை விடாத
உயிரின் பிடிவாதம்
இதை தெரிந்தவன் என்பதே
அவன் துன்பத்தை
ஆளத் தெரிந்தவன்
என்பதற்கான சாட்சி
ஜெயம்
05-02-2026
Author: arunwebhosting@gmail.com
Related Post
உனை உணராதிருக்கிறாய்
இரா.விஜயகௌரி மெல்லப் பேசும் சின்ன வரிகளுள் சிதறாமல் பதறாமல் மெல்ல உந்தனை வழுவாத வாழ்வுப் பாதையில் நழுவாமல் செல்வதற்காய் அழைக்கிறேன் [...]
” செம்மொழியாம் எம்தமிழ் “
ரஜனி அன்ரன் (B.A) ” செம்மொழியாம் எம்தமிழ் ” 19.02.2026 அன்னைத் தமிழே அருமருந்தே அமுதத் தமிழாய் மலர்ந்தவளே முன்னைத் [...]
பூம்பனி கொட்டுது
நகுலா சிவநாதன் பூம்பனி கொட்டுது பூம்பனி கொட்டுது புழுதியில் வீழ்குது தேம்பியே அழுகுது வானம் வானமும் கறுக்குது வையகம் பொழியுது [...]
