“உயிரான உறவே”
நேவிஸ் பிலிப் இல்(563)
உயிரான உறவாக
இறை என்பேனா
மறை என்பேனா
அன்னை என்பேனா
தந்தை என்பேனா
தாயுமானவன் என்பேனா
பத்து மாதம் சுமந்து பெற்று
குருதியை பாலாயூட்டி
அன்பாய் வளர்த்தெடுத்த
என் அம்மா
தோளிலே எனை சுமந்து
மனதிலே நேசம் வைத்த அப்பா
கண்டிப்பும் காட்டிடுவார்
விகடமாய் பேசிடுவார்
வாழ்வின் வரமாய் வந்தார்
கையோடு கையிணைத்தோம்
அன்பிற்கும் பஞ்சமில்ல
ஆசைக்கும் குறைவேயில்லை
உயிரான உறவுகளாய்
கூடியே வாழ்கின்றோம்
வம்சங்கள் தளைத்திடவே
பந்தங்கள் பெருகிடவே
இறை துணை கூடிடுமே
வரமே வேண்டிடுவோம்
நன்றி
Author: arunwebhosting@gmail.com
Related Post
புரிய முயலாதே 2
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு வாழ்க்கை அதை புரிய முயலவில்லை ஆனால் அதன் ஆழத்துள் மூழ்கி வெளிவந்திருக்கின்றேன் அது அனுபவிக்க வேண்டிய ஒரு [...]
பூம்பனி கொட்டுது
நகுலா சிவநாதன் பூம்பனி கொட்டுது பூம்பனி கொட்டுது புழுதியில் வீழ்குது தேம்பியே அழுகுது வானம் வானமும் கறுக்குது வையகம் பொழியுது [...]
கலந்து விட்ட உண்மைகள்
ராணி சம்பந்தர் பாதியைப் பாதியான மீதி தேடுது பிறப்பிலும் இறப்புச் சேதி கூடுது பிறந்தது ஒன்று இரண்டு ஆகுதே அறக்கப்பறக்க [...]
