“உயிரான உறவே”
நேவிஸ் பிலிப் இல்(563)
உயிரான உறவாக
இறை என்பேனா
மறை என்பேனா
அன்னை என்பேனா
தந்தை என்பேனா
தாயுமானவன் என்பேனா
பத்து மாதம் சுமந்து பெற்று
குருதியை பாலாயூட்டி
அன்பாய் வளர்த்தெடுத்த
என் அம்மா
தோளிலே எனை சுமந்து
மனதிலே நேசம் வைத்த அப்பா
கண்டிப்பும் காட்டிடுவார்
விகடமாய் பேசிடுவார்
வாழ்வின் வரமாய் வந்தார்
கையோடு கையிணைத்தோம்
அன்பிற்கும் பஞ்சமில்ல
ஆசைக்கும் குறைவேயில்லை
உயிரான உறவுகளாய்
கூடியே வாழ்கின்றோம்
வம்சங்கள் தளைத்திடவே
பந்தங்கள் பெருகிடவே
இறை துணை கூடிடுமே
வரமே வேண்டிடுவோம்
நன்றி
Author: arunwebhosting@gmail.com
Related Post
” செம்மொழியாம் எம்தமிழ் “
ரஜனி அன்ரன் (B.A) ” செம்மொழியாம் எம்தமிழ் ” 19.02.2026 அன்னைத் தமிழே அருமருந்தே அமுதத் தமிழாய் மலர்ந்தவளே முன்னைத் [...]
உருமாறும் பனித்துளிகள்
ராணி சம்பந்தர் இரவு பகல் ஓய்வின்றித் தூவிய பனி முட்டைகள் இலை உதிர்ந்த மொட்டை மரங்களில் வட்டப் பூவால் கொத்துக்கொத்தாக்கியது [...]
உயிரான உறவே…
வசந்தா ஜெகதீசன் உயிரான உறவே… வெற்றி மிகு வாழ்வில் வீறு கொள்ளும் சிந்தை பற்றியே படர்கின்ற பாதையின் செதுக்கல் பாசமுடன் [...]
