“உயிரான உறவே”
நேவிஸ் பிலிப் இல்(563)
உயிரான உறவாக
இறை என்பேனா
மறை என்பேனா
அன்னை என்பேனா
தந்தை என்பேனா
தாயுமானவன் என்பேனா
பத்து மாதம் சுமந்து பெற்று
குருதியை பாலாயூட்டி
அன்பாய் வளர்த்தெடுத்த
என் அம்மா
தோளிலே எனை சுமந்து
மனதிலே நேசம் வைத்த அப்பா
கண்டிப்பும் காட்டிடுவார்
விகடமாய் பேசிடுவார்
வாழ்வின் வரமாய் வந்தார்
கையோடு கையிணைத்தோம்
அன்பிற்கும் பஞ்சமில்ல
ஆசைக்கும் குறைவேயில்லை
உயிரான உறவுகளாய்
கூடியே வாழ்கின்றோம்
வம்சங்கள் தளைத்திடவே
பந்தங்கள் பெருகிடவே
இறை துணை கூடிடுமே
வரமே வேண்டிடுவோம்
நன்றி
Author: arunwebhosting@gmail.com
Related Post
உருமாறும் பனித்துளிகள்
ராணி சம்பந்தர் இரவு பகல் ஓய்வின்றித் தூவிய பனி முட்டைகள் இலை உதிர்ந்த மொட்டை மரங்களில் வட்டப் பூவால் கொத்துக்கொத்தாக்கியது [...]
“அன்பின் வழியினிலே”
நேவிஸ் பிலிப் கவி இல(563) அன்பின் வழியில் நடந்திட்டால் ஆயிரம் நன்மை கூடி வரும் இறையருள் ஒன்றே நாடி நின்றால் [...]
கலந்து விட்ட உண்மைகள்
ராணி சம்பந்தர் பாதியைப் பாதியான மீதி தேடுது பிறப்பிலும் இறப்புச் சேதி கூடுது பிறந்தது ஒன்று இரண்டு ஆகுதே அறக்கப்பறக்க [...]
