உருமாறும் பனித்துளிகள்
ராணி சம்பந்தர்
இரவு பகல் ஓய்வின்றித்
தூவிய பனி முட்டைகள்
இலை உதிர்ந்த மொட்டை
மரங்களில் வட்டப் பூவால்
கொத்துக்கொத்தாக்கியது
மூடு பனியாலே உறைந்து
சில கிளையில் காதலன்
உதய சூரியன் வரவிற்காக
வெண்ணிற உடை உடுத்த
காதலியை வரவேற்கும் காதல்
மன்னன் சொட்டுச்சொட்டாகும்
பனினீர்க் கோர்வை மாலையாக
அணிந்திடக் காத்திருக்கும் சுகம்
வீசுங் காற்றில் பல கனவோடு
ஊஞ்சலாடி மகிழும் பனித்துளியோ
ஒரு நாள் வாழும் ஈசல் போல சில
மணித்துளியில் உருமாறிக்
கண்ணீர்த் துளிகளுடன்
கரைந்திடுமே கவலையுடன் .
Author: arunwebhosting@gmail.com
Related Post
உயிரான உயிரே
உயிரான உயிரே ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ நினைவிலே சிலையாக வைத்தேன் உன்னை நீங்காத உயிராய் உயிரானாய் நீயும் ஆருயிரே ஆனந்தப் பூங்காற்றின் ஓசையாய் [...]
நெல்லு வயல் காடு
வயிதா முகமட் நெல்லு வயல் காடு நீஎனக்கு சோறு தங்கம் வாழ்வுக்கு வறுமை தீர்து வயிற்றுக்கு பசிதீர்து காற்றோடு கதைபேசி [...]
நினைவின் ஓரத்தில்..
வியாழன் கவி 2284!! நினைவுகளின் ஓரத்தில்..!! மறத்தல் அரியதாய் மனதிலே இறத்தல் வரை தொடரலாம் கரையும் பனியின் வீரியமோ கலந்தால் [...]
