உருமாறும் பனித்துளிகள்
ராணி சம்பந்தர்
இரவு பகல் ஓய்வின்றித்
தூவிய பனி முட்டைகள்
இலை உதிர்ந்த மொட்டை
மரங்களில் வட்டப் பூவால்
கொத்துக்கொத்தாக்கியது
மூடு பனியாலே உறைந்து
சில கிளையில் காதலன்
உதய சூரியன் வரவிற்காக
வெண்ணிற உடை உடுத்த
காதலியை வரவேற்கும் காதல்
மன்னன் சொட்டுச்சொட்டாகும்
பனினீர்க் கோர்வை மாலையாக
அணிந்திடக் காத்திருக்கும் சுகம்
வீசுங் காற்றில் பல கனவோடு
ஊஞ்சலாடி மகிழும் பனித்துளியோ
ஒரு நாள் வாழும் ஈசல் போல சில
மணித்துளியில் உருமாறிக்
கண்ணீர்த் துளிகளுடன்
கரைந்திடுமே கவலையுடன் .
Author: arunwebhosting@gmail.com
Related Post
“அன்பின் வழியினிலே”
நேவிஸ் பிலிப் கவி இல(563) அன்பின் வழியில் நடந்திட்டால் ஆயிரம் நன்மை கூடி வரும் இறையருள் ஒன்றே நாடி நின்றால் [...]
வாழ்வு வளம் பெற-2150 ஜெயா நடேச
எல்லோரும் நலம் பெற்று வாழவே எந்நாளும் இறைவன் விரும்புகிறார் ஏற்ற வழி செய்து பிறக்க வைத்தார் புவி போற்ற புது [...]
பூம்பனி கொட்டுது
நகுலா சிவநாதன் பூம்பனி கொட்டுது பூம்பனி கொட்டுது புழுதியில் வீழ்குது தேம்பியே அழுகுது வானம் வானமும் கறுக்குது வையகம் பொழியுது [...]
