உயிரான உயிரே
உயிரான உயிரே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நினைவிலே சிலையாக வைத்தேன் உன்னை
நீங்காத உயிராய் உயிரானாய் நீயும்
ஆருயிரே ஆனந்தப் பூங்காற்றின் ஓசையாய்
என்னகம் புகுந்தவா ஏற்றமாய் வழிவகுத்தவா
முன்னைய தவப்பயன் உனையே அடைந்தது
இன்முகம் கண்டதும் இன்பமே பொங்குமே
அன்பாலே என்னை அரவணைத்த காதலனே
இன்னொரு பிறவியிலும் நீதான் கணவன்
மதிப்பும் மாண்பும் மலர்ந்த முகமும்
மதியின் ஒளியாய் வீசும் அழகும்
விதியே உன்னை வாழ்த்தியே நிற்பேன்
கருணையும் நிறைந்தவரை காலமெல்லாம் வாழவைப்பாய்
சிவரூபன் சர்வேஸ்வரி
Author: arunwebhosting@gmail.com
Related Post
உயிரான உறவு..
வியாழன் கவி 2288 உயிரான உறவு.. உதிரத்தில் உணவூட்டி உணர்வுக்குள் அன்பேந்தி உலகுக்கு வழிகாட்டியவள் உயிரான உறவானாள்.. கருவினுக்கு காரணியாய் [...]
உயிரான உறவே…
வசந்தா ஜெகதீசன் உயிரான உறவே… வெற்றி மிகு வாழ்வில் வீறு கொள்ளும் சிந்தை பற்றியே படர்கின்ற பாதையின் செதுக்கல் பாசமுடன் [...]
உயிரான உறவு…..
இரா.விஜயகௌரி வைகறைகள் உயிர்ப்பெழுதும் வனப்பு மிக்க விடியலுக்கு தினமெழுதும் மொழிப்புனலாய் கனவெழுதும் தேவதை இவள் தன்வலியை தான் மறப்பாள் உதிரத்துள் [...]
