உயிரான உயிரே
உயிரான உயிரே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நினைவிலே சிலையாக வைத்தேன் உன்னை
நீங்காத உயிராய் உயிரானாய் நீயும்
ஆருயிரே ஆனந்தப் பூங்காற்றின் ஓசையாய்
என்னகம் புகுந்தவா ஏற்றமாய் வழிவகுத்தவா
முன்னைய தவப்பயன் உனையே அடைந்தது
இன்முகம் கண்டதும் இன்பமே பொங்குமே
அன்பாலே என்னை அரவணைத்த காதலனே
இன்னொரு பிறவியிலும் நீதான் கணவன்
மதிப்பும் மாண்பும் மலர்ந்த முகமும்
மதியின் ஒளியாய் வீசும் அழகும்
விதியே உன்னை வாழ்த்தியே நிற்பேன்
கருணையும் நிறைந்தவரை காலமெல்லாம் வாழவைப்பாய்
சிவரூபன் சர்வேஸ்வரி
Author: arunwebhosting@gmail.com
Related Post
வானிலை நிபுணருக்கு வாழ்த்து
சக்தி சிறினிசங்கர் அறுசீர் விருத்தம் சீர் வரையறை: விளம் விளம் விளம்/ விளம் விளம் விளம் அறிவியல் ஆர்வலர் உலகினை [...]
” செம்மொழியாம் எம்தமிழ் “
ரஜனி அன்ரன் (B.A) ” செம்மொழியாம் எம்தமிழ் ” 19.02.2026 அன்னைத் தமிழே அருமருந்தே அமுதத் தமிழாய் மலர்ந்தவளே முன்னைத் [...]
பாடுபடு!
நகுலா சிவநாதன் பாடுபடு! அன்பும் பண்பும் குணமாகும் அதுவே அகத்தின் அழகாகும் இன்பம் என்றும் இதமாகும் இதுவே மகிழ்வின் அடையாளம் [...]
