வாழ்வு வளம் பெற-2150 ஜெயா நடேச
எல்லோரும் நலம் பெற்று வாழவே
எந்நாளும் இறைவன் விரும்புகிறார்
ஏற்ற வழி செய்து பிறக்க வைத்தார்
புவி போற்ற புது வாழ்வு தந்தார்
வாழ்வில் சில பல துன்பம தந்தார்
தக்க தருணங்களில் கை கொடுத்தார்
நல் வழிகள் பல சொல்லி தந்தார்
துடிப்பாக துணிவாக தூய்மை அணிந்து
இறைவன் தந்த வாழ்வை வாழ்வாக்கி
வரமாக பெற்று பயனாக்கி வாழ்ந்தேன்
தனிமை என்ற நிலையினை உணராது
பிள்ளைகள் உறவுகள் பலமாக நின்றனர்
சுதந்திர வாழ்வில் பறந்து திரிய வைத்தார்
மலர்ந்துள்ள முகத்தை மகிழ்வாக்கினார்
தேவன் கரத்திலொரு பரிசாக தந்திட்டார்
நல் மனம் கொண்டு தமிழை வளர்த்திடுவோம்
புவி போற்ற புகழாரம் வேண்டி வாழ்ந்திடுவோம்
Author: arunwebhosting@gmail.com
Related Post
உயிரான உறவே…
வசந்தா ஜெகதீசன் உயிரான உறவே… வெற்றி மிகு வாழ்வில் வீறு கொள்ளும் சிந்தை பற்றியே படர்கின்ற பாதையின் செதுக்கல் பாசமுடன் [...]
உயிரான உயிரே
ராணி சம்பந்தர் பயிருக்கு மண் சொந்தம் உயிருக்குக் கண்ணான கணவன் மனைவி பந்தம் மெய்யான இன்பம் வேலி பொய்யான துன்பம் [...]
“புதையுண்ட மலையகம்”
நேவிஸ் பிலிப் கவி இல(562) தெரிகின்ற தூரமும் தொடுகின்ற வானமும் பணிந்து வந்த அந்த வானத்தை காண விரைந்த என்மனம் [...]
