உயிரான உயிரே
உயிரான உயிரே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நினைவிலே சிலையாக வைத்தேன் உன்னை
நீங்காத உயிராய் உயிரானாய் நீயும்
ஆருயிரே ஆனந்தப் பூங்காற்றின் ஓசையாய்
என்னகம் புகுந்தவா ஏற்றமாய் வழிவகுத்தவா
முன்னைய தவப்பயன் உனையே அடைந்தது
இன்முகம் கண்டதும் இன்பமே பொங்குமே
அன்பாலே என்னை அரவணைத்த காதலனே
இன்னொரு பிறவியிலும் நீதான் கணவன்
மதிப்பும் மாண்பும் மலர்ந்த முகமும்
மதியின் ஒளியாய் வீசும் அழகும்
விதியே உன்னை வாழ்த்தியே நிற்பேன்
கருணையும் நிறைந்தவரை காலமெல்லாம் வாழவைப்பாய்
சிவரூபன் சர்வேஸ்வரி
Author: arunwebhosting@gmail.com
Related Post
என்னவென புரியவில்லை
செல்வி.நித்தியானந்தன் என்னவென புரியவில்லை ஏன்எனக்கு இப்படி என்னவெனபுரியவில்லை என்நேரம் சரியில்லையா புரிந்து கொள்ளவே முடியவில்லை காலநிலை மாற்றம் தொடர் மழையாகவும் [...]
முடிவில்லாத் தொடக்கம் 84
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 05-02-2026 வாழ்வு முடிவில்லாத் தொடர்ச்சி வலிகளும் இன்பமும் வளைந்து நெளிந்து வட்டமிடும் சுழற்சி முடிந்து விட்டதென [...]
நெல்லு வயல் காடு
வயிதா முகமட் நெல்லு வயல் காடு நீஎனக்கு சோறு தங்கம் வாழ்வுக்கு வறுமை தீர்து வயிற்றுக்கு பசிதீர்து காற்றோடு கதைபேசி [...]
