வாழ்வு வளம் பெற-2150 ஜெயா நடேச
எல்லோரும் நலம் பெற்று வாழவே
எந்நாளும் இறைவன் விரும்புகிறார்
ஏற்ற வழி செய்து பிறக்க வைத்தார்
புவி போற்ற புது வாழ்வு தந்தார்
வாழ்வில் சில பல துன்பம தந்தார்
தக்க தருணங்களில் கை கொடுத்தார்
நல் வழிகள் பல சொல்லி தந்தார்
துடிப்பாக துணிவாக தூய்மை அணிந்து
இறைவன் தந்த வாழ்வை வாழ்வாக்கி
வரமாக பெற்று பயனாக்கி வாழ்ந்தேன்
தனிமை என்ற நிலையினை உணராது
பிள்ளைகள் உறவுகள் பலமாக நின்றனர்
சுதந்திர வாழ்வில் பறந்து திரிய வைத்தார்
மலர்ந்துள்ள முகத்தை மகிழ்வாக்கினார்
தேவன் கரத்திலொரு பரிசாக தந்திட்டார்
நல் மனம் கொண்டு தமிழை வளர்த்திடுவோம்
புவி போற்ற புகழாரம் வேண்டி வாழ்ந்திடுவோம்
Author: arunwebhosting@gmail.com
Related Post
புரிய முயலாதே 1
நேற்று என்பது நினைவோடு மட்டும் நாளை என்பது கற்பனையாக சொட்டும் உண்மை மட்டும் இன்று நிகழ்கின்றது சுகம் வந்தால் நிரந்தரமென [...]
உயிரான உறவு
இல 77 உயிரான உறவு நாம் பிறந்ததிலிருந்து முதல் முதல் வந்த உயிரான உறவு எமது பெற்றோர்களே அன்பும் பாதுகாப்பும் [...]
பாடுபடு!
நகுலா சிவநாதன் பாடுபடு! அன்பும் பண்பும் குணமாகும் அதுவே அகத்தின் அழகாகும் இன்பம் என்றும் இதமாகும் இதுவே மகிழ்வின் அடையாளம் [...]
