பூம்பனி கொட்டுது
நகுலா சிவநாதன்
பூம்பனி கொட்டுது
பூம்பனி கொட்டுது புழுதியில் வீழ்குது
தேம்பியே அழுகுது வானம்
வானமும் கறுக்குது வையகம் பொழியுது
வண்ணமாய் இருக்குது காலை
நிறைபனி பொழியுது நிலமும் மூடுது
நீண்ட நேரம் இருளாக
வெள்ளையாய் கொட்டுது வெண்பனிச்சரால்
துள்ளியே மகிழுது தூரத்து விடியல்
அள்ளியே கையில் வைத்திட நாமும்
அகன்று செய்லுது பனியின் துகள்கள்;
கிள்ளி எறிந்திடும் மாணவமணிகளும்
துள்ளி விளையாடுவர் தூசிப்பனியில்
இயற்கையின் விந்தை இதுவென நாமும்
இணைந்து வாழ்தல் நலமன்றோ!
முயற்சியைக் கூட்டி முனைந்து நீயும்
முன்பனிக் காலை விடியலைப் பாரு!!
நகுலா சிவநாதன்1843
Author: arunwebhosting@gmail.com
Related Post
உயிரான உயிரே
ராணி சம்பந்தர் பயிருக்கு மண் சொந்தம் உயிருக்குக் கண்ணான கணவன் மனைவி பந்தம் மெய்யான இன்பம் வேலி பொய்யான துன்பம் [...]
உயிரான உறவு 86
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-02-2026 உயிரான உறவு என் தாயே உயிரெனக்கு தந்தவள் நீயே மூச்சாய் நின்று பேச்சு தந்தவளே-என் [...]
ஒழுக்கம்
இல 76 தலைப்பு = ஒழுக்கம் ஒழுக்கம் உயிரை விட மேலானது ஒழுக்கம் இல்லாதவர் வாழ்க்கையில் நன்மைகளை காண முடியாது [...]
