பூம்பனி கொட்டுது
நகுலா சிவநாதன்
பூம்பனி கொட்டுது
பூம்பனி கொட்டுது புழுதியில் வீழ்குது
தேம்பியே அழுகுது வானம்
வானமும் கறுக்குது வையகம் பொழியுது
வண்ணமாய் இருக்குது காலை
நிறைபனி பொழியுது நிலமும் மூடுது
நீண்ட நேரம் இருளாக
வெள்ளையாய் கொட்டுது வெண்பனிச்சரால்
துள்ளியே மகிழுது தூரத்து விடியல்
அள்ளியே கையில் வைத்திட நாமும்
அகன்று செய்லுது பனியின் துகள்கள்;
கிள்ளி எறிந்திடும் மாணவமணிகளும்
துள்ளி விளையாடுவர் தூசிப்பனியில்
இயற்கையின் விந்தை இதுவென நாமும்
இணைந்து வாழ்தல் நலமன்றோ!
முயற்சியைக் கூட்டி முனைந்து நீயும்
முன்பனிக் காலை விடியலைப் பாரு!!
நகுலா சிவநாதன்1843
Author: arunwebhosting@gmail.com
Related Post
“உயிரான உறவே”
நேவிஸ் பிலிப் இல்(563) உயிரான உறவாக இறை என்பேனா மறை என்பேனா அன்னை என்பேனா தந்தை என்பேனா தாயுமானவன் என்பேனா [...]
உருமாறும் பனித்துளிகள்
ராணி சம்பந்தர் இரவு பகல் ஓய்வின்றித் தூவிய பனி முட்டைகள் இலை உதிர்ந்த மொட்டை மரங்களில் வட்டப் பூவால் கொத்துக்கொத்தாக்கியது [...]
உனை உணராதிருக்கிறாய்
இரா.விஜயகௌரி மெல்லப் பேசும் சின்ன வரிகளுள் சிதறாமல் பதறாமல் மெல்ல உந்தனை வழுவாத வாழ்வுப் பாதையில் நழுவாமல் செல்வதற்காய் அழைக்கிறேன் [...]
