“புதையுண்ட மலையகம்”
நேவிஸ் பிலிப் கவி இல(562)
தெரிகின்ற தூரமும் தொடுகின்ற வானமும்
பணிந்து வந்த அந்த வானத்தை
காண விரைந்த என்மனம்
கசிந்து கரைகின்றது
பசுமைச் சாயம் கவிழ்ந்த முகடுகள்
கூடை சுமந்து குனிந்த முக்காட்டுப் பெண்கள்
வளைந்து நெளிந்த பாதைகளில்
ஊர்ந்து விரைகின்ற வாகனங்கள்
பச்சை வண்ணப் பர்வதங்கள்
இச்சையூட்டும் நெடு மரங்கள்
பண்ணையெங்கும் பசுவினங்கள்
பஞ்சு போல புல் நிலங்கள்
அழகழகாய் மலரினங்கள்
அடுக்கடுக்காய் விளை நிலங்கள்
துள்ளியோடும் மான்கள் போல
பள்ளி செல்லும் மாணவர்கள்
பனித் துளி மேல் தலை முட்ட
களை கட்டும் திசை எட்டும்
எழில் கூட்டும் மலையகத்தை
உறைந்த குளிரில்
தேடியும் எங்கும் காணலையே
நன்றி********
Author: arunwebhosting@gmail.com
Related Post
உயிர்மெய்யாய்….
வசந்தா ஜெகதீசன் உயிர்மெய்யாய்… மொழிக்கு முதலானது முழுமைக்கு நிகரானது உயிர்ப்பில் உலகானது உயிராமெய்யே வேரானது வாழ்வின் தடமானது வரலாற்று மொழியானது [...]
உனை உணராதிருக்கிறாய்
இரா.விஜயகௌரி மெல்லப் பேசும் சின்ன வரிகளுள் சிதறாமல் பதறாமல் மெல்ல உந்தனை வழுவாத வாழ்வுப் பாதையில் நழுவாமல் செல்வதற்காய் அழைக்கிறேன் [...]
உயிரான உறவு
நகுலா சிவநாதன் உயிரான உறவு உயிரான காதல் உளத்துக்காதல் பயிராக வளரும் பண்பாட்டுக்காதல் நிலவாக உலவும் நித்தியக் காதல் நீண்டு [...]
