தருவாய் தளிராய்…
வசந்தா ஜெகதீசன்
தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும்
தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும்
பருவ எழிலில் பண்பட்டு வாழும்
தருவே புவியைத் தாங்கிடும் சக்தி
தருமே மழையை புவியீர்ப்பு சுழற்சி
தளிராய் இலையாய் சருகாய் உதிரும்
பருவச் சுழற்சியில் பயனை விதைக்கும்
எழிலில் நிறைக்கும் இயற்கைப் புவியை
மண்ணின் வளத்தை காத்திடும்
மகிமை
நிழலாய் நிறைக்கும் கனியாய் காயாய் கரிசனை பலவாய்
விறகாய் மரமாய் விதவிதமாகும் தளபாடப் பயனாய்
தருவின் கொடைகள் தரணிக்கு மகுடம்
தருமே பற்பல பாடங்கள் வாழ்வில்
ஏற்றே என்றும் ஒரு மரம் நாட்டு
எதிர்காலம் ஒளிரவழியினைச் சாற்று
வெட்டு மரத்தை வீழ்த்தும் முன்யோசி!கோடரிக்காம்பாய் வீழ்த்துதல்தவிர்ப்போம்.நன்றி
Author: arunwebhosting@gmail.com
Related Post
கலந்து விட்ட உண்மைகள்
ராணி சம்பந்தர் பாதியைப் பாதியான மீதி தேடுது பிறப்பிலும் இறப்புச் சேதி கூடுது பிறந்தது ஒன்று இரண்டு ஆகுதே அறக்கப்பறக்க [...]
” செம்மொழியாம் எம்தமிழ் “
ரஜனி அன்ரன் (B.A) ” செம்மொழியாம் எம்தமிழ் ” 19.02.2026 அன்னைத் தமிழே அருமருந்தே அமுதத் தமிழாய் மலர்ந்தவளே முன்னைத் [...]
புரிய முயலாதே 2
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு வாழ்க்கை அதை புரிய முயலவில்லை ஆனால் அதன் ஆழத்துள் மூழ்கி வெளிவந்திருக்கின்றேன் அது அனுபவிக்க வேண்டிய ஒரு [...]
