உயிரான உறவு 86
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-02-2026
உயிரான உறவு என் தாயே
உயிரெனக்கு தந்தவள் நீயே
மூச்சாய் நின்று பேச்சு தந்தவளே-என்
மூச்சுள்ள வரை உனை சுமப்பேன்
பல பிள்ளை ஈன்றபோதும்
பாரபட்சமன்றி பாசம் தந்து
திகைக்க வைக்கும் அன்பு மழையே
தித்திக்க வைக்கும் தெய்வீகச் சுடரே!
பிள்ளையின் கனவை தன்
பெரும் வாழ்வாய்க் கொண்டு
வெற்றிக்காய் பாடுபடுபவரே
வெண்மை உள்ளம் கொண்டவளே
சொல்லில் வடிக்க முடிக்கா காவியமே
சொற்களும் உன்னிடம் தோற்குமே
உயிரான உறவு நீயே அம்மா..
உன்னைப் புகழ வார்த்தை இல்லை எனக்கு….
Author: Jeba Sri
Related Post
மாசி திங்கள்
வியாழன் கவி 2292 மாசி திங்கள்.. மாசித் திங்கள் மனதோரம் சாரல் மனதை வருடும் நாட்களின் சேரல் குறுகிய காலத்தின் [...]
என்னவென புரியவில்லை
செல்வி.நித்தியானந்தன் என்னவென புரியவில்லை ஏன்எனக்கு இப்படி என்னவெனபுரியவில்லை என்நேரம் சரியில்லையா புரிந்து கொள்ளவே முடியவில்லை காலநிலை மாற்றம் தொடர் மழையாகவும் [...]
உனை உணராதிருக்கிறாய்
இரா.விஜயகௌரி மெல்லப் பேசும் சின்ன வரிகளுள் சிதறாமல் பதறாமல் மெல்ல உந்தனை வழுவாத வாழ்வுப் பாதையில் நழுவாமல் செல்வதற்காய் அழைக்கிறேன் [...]
