உயிரான உறவு
செல்வி நித்தியானந்தன்
உயிரான உறவு
உயிருக்குள் கருவாகி
உதிரத்துள் சுமையாகி
உவகையில் இணைவாகி
உள்ளமதில் கொள்ளை
கொண்ட தாய்அவரே
உலகைவிட்டு ஆறு
ஆண்டு கடந்ததே
உம்நினைவு எம்மை
விட்டு அகலாதே
உயிரான உறவுகள்
உதிரப் பிணைப்புகள்
உரிமை உணர்வுகள்
உசிரை எடுக்கினம்
உயிரான உறவுதனை
பயிரான நினைவுகளை
காதல் நினைவுடனே
காக்கும் எம்உயிரே
கருவான உறவுடனே
கண்ணின் மணிபோல
காலமெல்லாம் காக்கும்
காத்திடும் உறவுகளின்
நினைவுடனே நானும்
செல்வி நித்தியானந்தன்
Author: arunwebhosting@gmail.com
Related Post
உனை உணராதிருக்கிறாய்
இரா.விஜயகௌரி மெல்லப் பேசும் சின்ன வரிகளுள் சிதறாமல் பதறாமல் மெல்ல உந்தனை வழுவாத வாழ்வுப் பாதையில் நழுவாமல் செல்வதற்காய் அழைக்கிறேன் [...]
அகத்தினில் இன்பமே
செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே [...]
உயிரான உறவு…..
இரா.விஜயகௌரி வைகறைகள் உயிர்ப்பெழுதும் வனப்பு மிக்க விடியலுக்கு தினமெழுதும் மொழிப்புனலாய் கனவெழுதும் தேவதை இவள் தன்வலியை தான் மறப்பாள் உதிரத்துள் [...]
