உயிரான உறவு
செல்வி நித்தியானந்தன்
உயிரான உறவு
உயிருக்குள் கருவாகி
உதிரத்துள் சுமையாகி
உவகையில் இணைவாகி
உள்ளமதில் கொள்ளை
கொண்ட தாய்அவரே
உலகைவிட்டு ஆறு
ஆண்டு கடந்ததே
உம்நினைவு எம்மை
விட்டு அகலாதே
உயிரான உறவுகள்
உதிரப் பிணைப்புகள்
உரிமை உணர்வுகள்
உசிரை எடுக்கினம்
உயிரான உறவுதனை
பயிரான நினைவுகளை
காதல் நினைவுடனே
காக்கும் எம்உயிரே
கருவான உறவுடனே
கண்ணின் மணிபோல
காலமெல்லாம் காக்கும்
காத்திடும் உறவுகளின்
நினைவுடனே நானும்
செல்வி நித்தியானந்தன்
Author: arunwebhosting@gmail.com
Related Post
கலந்து விட்ட உண்மைகள்
ராணி சம்பந்தர் பாதியைப் பாதியான மீதி தேடுது பிறப்பிலும் இறப்புச் சேதி கூடுது பிறந்தது ஒன்று இரண்டு ஆகுதே அறக்கப்பறக்க [...]
உயிரான உறவே…….
ரஜனி அன்ரன் ( B.A) உயிரான உறவே….. 12.02.2026 அறிமுகமில்லாத் தேடலின் ஆத்மார்த்தம் இசையோடுகலவி இசைவால் உயிராகிய உறவே உணர்வினில் [...]
உருமாறும் பனித்துளிகள்
ராணி சம்பந்தர் இரவு பகல் ஓய்வின்றித் தூவிய பனி முட்டைகள் இலை உதிர்ந்த மொட்டை மரங்களில் வட்டப் பூவால் கொத்துக்கொத்தாக்கியது [...]
