உயிரான உறவு..
வியாழன் கவி 2288
உயிரான உறவு..
உதிரத்தில் உணவூட்டி
உணர்வுக்குள் அன்பேந்தி
உலகுக்கு வழிகாட்டியவள்
உயிரான உறவானாள்..
கருவினுக்கு காரணியாய்
காலமெலாம் தாங்கி நின்று
கற்றிடவும் வல்லமை தனை
பெற்றிட தந்தை உயிரான உறவாம்..
காதலில் மூழ்கியெழுந்து
கண்ணியம் தனை சுமந்து
இருமன இணைவாகி
இல்லறம் ஆக்கும் உயிரான உறவு..
பிறப்புக்கும் இறப்புக்கும்
இணைப்பிற்கும் பிணைப்பிற்கும்
பந்தத்தின் தொடருகைக்கும்
ஒன்றிக்கும் உயிரான உறவு பல..
சிவதர்சனி இரா
11/2/2026
Author: arunwebhosting@gmail.com
Related Post
உயிர்மெய்யாய்….
வசந்தா ஜெகதீசன் உயிர்மெய்யாய்… மொழிக்கு முதலானது முழுமைக்கு நிகரானது உயிர்ப்பில் உலகானது உயிராமெய்யே வேரானது வாழ்வின் தடமானது வரலாற்று மொழியானது [...]
நெல்லு வயல் காடு
வயிதா முகமட் நெல்லு வயல் காடு நீஎனக்கு சோறு தங்கம் வாழ்வுக்கு வறுமை தீர்து வயிற்றுக்கு பசிதீர்து காற்றோடு கதைபேசி [...]
“உயிரான உறவே”
நேவிஸ் பிலிப் இல்(563) உயிரான உறவாக இறை என்பேனா மறை என்பேனா அன்னை என்பேனா தந்தை என்பேனா தாயுமானவன் என்பேனா [...]
