உயிரான உறவு..
வியாழன் கவி 2288
உயிரான உறவு..
உதிரத்தில் உணவூட்டி
உணர்வுக்குள் அன்பேந்தி
உலகுக்கு வழிகாட்டியவள்
உயிரான உறவானாள்..
கருவினுக்கு காரணியாய்
காலமெலாம் தாங்கி நின்று
கற்றிடவும் வல்லமை தனை
பெற்றிட தந்தை உயிரான உறவாம்..
காதலில் மூழ்கியெழுந்து
கண்ணியம் தனை சுமந்து
இருமன இணைவாகி
இல்லறம் ஆக்கும் உயிரான உறவு..
பிறப்புக்கும் இறப்புக்கும்
இணைப்பிற்கும் பிணைப்பிற்கும்
பந்தத்தின் தொடருகைக்கும்
ஒன்றிக்கும் உயிரான உறவு பல..
சிவதர்சனி இரா
11/2/2026
Author: arunwebhosting@gmail.com
Related Post
உயிரான உறவு
செல்வி நித்தியானந்தன் உயிரான உறவு உயிருக்குள் கருவாகி உதிரத்துள் சுமையாகி உவகையில் இணைவாகி உள்ளமதில் கொள்ளை கொண்ட தாய்அவரே உலகைவிட்டு [...]
ஒழுக்கம்
இல 76 தலைப்பு = ஒழுக்கம் ஒழுக்கம் உயிரை விட மேலானது ஒழுக்கம் இல்லாதவர் வாழ்க்கையில் நன்மைகளை காண முடியாது [...]
என்னவென புரியவில்லை
செல்வி.நித்தியானந்தன் என்னவென புரியவில்லை ஏன்எனக்கு இப்படி என்னவெனபுரியவில்லை என்நேரம் சரியில்லையா புரிந்து கொள்ளவே முடியவில்லை காலநிலை மாற்றம் தொடர் மழையாகவும் [...]
