உயிரான உயிரே
ராணி சம்பந்தர்
பயிருக்கு மண் சொந்தம்
உயிருக்குக் கண்ணான
கணவன் மனைவி பந்தம்
மெய்யான இன்பம் வேலி
பொய்யான துன்பம் போலி
உய்த்தறிந்தால் அது ஜாலி
யாருக்கு யார் சேரும் என்பது
எவருக்கு எவர் தேறும் எதுவும்
அவரவர் விதியின் பதி கூறும்
சதியின் விளையாட்டு சித்தி பெற
அன்பு ,பொறுமை ,புரிந்துணர்வும்,
விட்டுக்கொடுப்பும் இருப்பின் பயிர்
பட்டுப்போகாது வளர்வது போல
வாழ்வும் வளம்பெற்று ஒன்றித்து
வளர உயிரான உறவு உன்னதத்
திறவு கோலாகுமே பிரிவின்றி .
Author: arunwebhosting@gmail.com
Related Post
உயிரான உறவு
நகுலா சிவநாதன் உயிரான உறவு உயிரான காதல் உளத்துக்காதல் பயிராக வளரும் பண்பாட்டுக்காதல் நிலவாக உலவும் நித்தியக் காதல் நீண்டு [...]
உயிரான உயிரே
உயிரான உயிரே ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ நினைவிலே சிலையாக வைத்தேன் உன்னை நீங்காத உயிராய் உயிரானாய் நீயும் ஆருயிரே ஆனந்தப் பூங்காற்றின் ஓசையாய் [...]
நினைவின் ஓரத்தில்..
வியாழன் கவி 2284!! நினைவுகளின் ஓரத்தில்..!! மறத்தல் அரியதாய் மனதிலே இறத்தல் வரை தொடரலாம் கரையும் பனியின் வீரியமோ கலந்தால் [...]
