உயிரான உயிரே
ராணி சம்பந்தர்
பயிருக்கு மண் சொந்தம்
உயிருக்குக் கண்ணான
கணவன் மனைவி பந்தம்
மெய்யான இன்பம் வேலி
பொய்யான துன்பம் போலி
உய்த்தறிந்தால் அது ஜாலி
யாருக்கு யார் சேரும் என்பது
எவருக்கு எவர் தேறும் எதுவும்
அவரவர் விதியின் பதி கூறும்
சதியின் விளையாட்டு சித்தி பெற
அன்பு ,பொறுமை ,புரிந்துணர்வும்,
விட்டுக்கொடுப்பும் இருப்பின் பயிர்
பட்டுப்போகாது வளர்வது போல
வாழ்வும் வளம்பெற்று ஒன்றித்து
வளர உயிரான உறவு உன்னதத்
திறவு கோலாகுமே பிரிவின்றி .
Author: arunwebhosting@gmail.com
Related Post
உயிரான உறவு…..
இரா.விஜயகௌரி வைகறைகள் உயிர்ப்பெழுதும் வனப்பு மிக்க விடியலுக்கு தினமெழுதும் மொழிப்புனலாய் கனவெழுதும் தேவதை இவள் தன்வலியை தான் மறப்பாள் உதிரத்துள் [...]
மாசி திங்கள்
வியாழன் கவி 2292 மாசி திங்கள்.. மாசித் திங்கள் மனதோரம் சாரல் மனதை வருடும் நாட்களின் சேரல் குறுகிய காலத்தின் [...]
கலந்து விட்ட உண்மைகள்
ராணி சம்பந்தர் பாதியைப் பாதியான மீதி தேடுது பிறப்பிலும் இறப்புச் சேதி கூடுது பிறந்தது ஒன்று இரண்டு ஆகுதே அறக்கப்பறக்க [...]
