அகத்தினில் இன்பமே


செல்வி நித்தியானந்தன்

அகத்தினில் இன்பமே

ஆறுவார விடுமுறை
ஓடியே சென்றதே
ஆளுமை குறைந்து
முடங்கிகே போனதே

தாயகம் என்றதும்
தனக்குள்ளே மகிழ்ச்சி
தன்இயல்பு மறந்து
தள்ளாடும் நெகிழ்ச்சி

முப்பதுமுறை பயணம்
முடங்கிய இம்முறை
முன்பனி காலமாய்
முழுநேரம் வீட்டினிலே

அடுத்த வாரமும்
அழகிய பயணமும்
ஆளுமை வரவே
அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன்

1 thought on “அகத்தினில் இன்பமே”

கருத்துக்களை பதிவிடுக