” செம்மொழியாம் எம்தமிழ் “
ரஜனி அன்ரன் (B.A) ” செம்மொழியாம் எம்தமிழ் ” 19.02.2026
அன்னைத் தமிழே அருமருந்தே
அமுதத் தமிழாய் மலர்ந்தவளே
முன்னைத் தவத்தின்பயனாக
கன்னித் தமிழாய் கனிந்தவளே
உன்னைப் போற்றிப் பணிகின்றேன்
உலகின் முதல்மொழி நீதானே !
வள்ளுவன் வழியில் வாழ்வியல்தமிழாய்
கம்பன் கணிப்பில் காவியத்தமிழாய்
பாரதி நடையில் புதுமைத்தமிழாய்
பாரதிதாசன் வழியில் புரட்சித்தமிழாய்
இளங்கோவின் இலக்கில் இலக்கியத்தமிழாய்
இரண்டறக் கலந்த செம்மொழியே நீவாழி !
அன்னைத்தமிழின் சிறப்பினை
அளவிட வார்த்தைகள் கிடையாதே
இளமை புதுமை தொன்மை மிகுந்த
இனிமைத் தமிழே – உனை
மூச்சாய் கொண்டோம் பேச்சாய் கொண்டோம்
எத்தனை மொழிகள் தான்இருந்தாலும்
செம்மொழியாம் உந்தனுக்கு ஈடாகுமா ?
Author: ரஜனி அன்ரன்
Related Post
௨யிரான காதல்
வஜிதா முஹம்மட் ௨யிரான காதல் க௫வுக்குள் ௨யிராகி க௫ணைக்குள் நிஜமாகி வலிகளை வரமாக்கி ௨யி௫க்குள் ௨றவு தாயே மூச்சு முட்டும் [...]
உயிரான உயிரே
உயிரான உயிரே ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ நினைவிலே சிலையாக வைத்தேன் உன்னை நீங்காத உயிராய் உயிரானாய் நீயும் ஆருயிரே ஆனந்தப் பூங்காற்றின் ஓசையாய் [...]
உயிரான உயிரே
ராணி சம்பந்தர் பயிருக்கு மண் சொந்தம் உயிருக்குக் கண்ணான கணவன் மனைவி பந்தம் மெய்யான இன்பம் வேலி பொய்யான துன்பம் [...]
