உயிரான உயிரே
உயிரான உயிரே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நினைவிலே சிலையாக வைத்தேன் உன்னை
நீங்காத உயிராய் உயிரானாய் நீயும்
ஆருயிரே ஆனந்தப் பூங்காற்றின் ஓசையாய்
என்னகம் புகுந்தவா ஏற்றமாய் வழிவகுத்தவா
முன்னைய தவப்பயன் உனையே அடைந்தது
இன்முகம் கண்டதும் இன்பமே பொங்குமே
அன்பாலே என்னை அரவணைத்த காதலனே
இன்னொரு பிறவியிலும் நீதான் கணவன்
மதிப்பும் மாண்பும் மலர்ந்த முகமும்
மதியின் ஒளியாய் வீசும் அழகும்
விதியே உன்னை வாழ்த்தியே நிற்பேன்
கருணையும் நிறைந்தவரை காலமெல்லாம் வாழவைப்பாய்
சிவரூபன் சர்வேஸ்வரி
Author: arunwebhosting@gmail.com
Related Post
“அன்பின் வழியினிலே”
நேவிஸ் பிலிப் கவி இல(563) அன்பின் வழியில் நடந்திட்டால் ஆயிரம் நன்மை கூடி வரும் இறையருள் ஒன்றே நாடி நின்றால் [...]
“புதையுண்ட மலையகம்”
நேவிஸ் பிலிப் கவி இல(562) தெரிகின்ற தூரமும் தொடுகின்ற வானமும் பணிந்து வந்த அந்த வானத்தை காண விரைந்த என்மனம் [...]
முடிவில்லாத் தொடக்கம் 84
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 05-02-2026 வாழ்வு முடிவில்லாத் தொடர்ச்சி வலிகளும் இன்பமும் வளைந்து நெளிந்து வட்டமிடும் சுழற்சி முடிந்து விட்டதென [...]
