“புதையுண்ட மலையகம்”
நேவிஸ் பிலிப் கவி இல(562)
தெரிகின்ற தூரமும் தொடுகின்ற வானமும்
பணிந்து வந்த அந்த வானத்தை
காண விரைந்த என்மனம்
கசிந்து கரைகின்றது
பசுமைச் சாயம் கவிழ்ந்த முகடுகள்
கூடை சுமந்து குனிந்த முக்காட்டுப் பெண்கள்
வளைந்து நெளிந்த பாதைகளில்
ஊர்ந்து விரைகின்ற வாகனங்கள்
பச்சை வண்ணப் பர்வதங்கள்
இச்சையூட்டும் நெடு மரங்கள்
பண்ணையெங்கும் பசுவினங்கள்
பஞ்சு போல புல் நிலங்கள்
அழகழகாய் மலரினங்கள்
அடுக்கடுக்காய் விளை நிலங்கள்
துள்ளியோடும் மான்கள் போல
பள்ளி செல்லும் மாணவர்கள்
பனித் துளி மேல் தலை முட்ட
களை கட்டும் திசை எட்டும்
எழில் கூட்டும் மலையகத்தை
உறைந்த குளிரில்
தேடியும் எங்கும் காணலையே
நன்றி********
Author: arunwebhosting@gmail.com
Related Post
உயிரான உறவு
செல்வி நித்தியானந்தன் உயிரான உறவு உயிருக்குள் கருவாகி உதிரத்துள் சுமையாகி உவகையில் இணைவாகி உள்ளமதில் கொள்ளை கொண்ட தாய்அவரே உலகைவிட்டு [...]
என்னவென புரியவில்லை
செல்வி.நித்தியானந்தன் என்னவென புரியவில்லை ஏன்எனக்கு இப்படி என்னவெனபுரியவில்லை என்நேரம் சரியில்லையா புரிந்து கொள்ளவே முடியவில்லை காலநிலை மாற்றம் தொடர் மழையாகவும் [...]
ஒழுக்கம்
இல 76 தலைப்பு = ஒழுக்கம் ஒழுக்கம் உயிரை விட மேலானது ஒழுக்கம் இல்லாதவர் வாழ்க்கையில் நன்மைகளை காண முடியாது [...]
