உயிரான உறவு…..
இரா.விஜயகௌரி
வைகறைகள் உயிர்ப்பெழுதும்
வனப்பு மிக்க விடியலுக்கு
தினமெழுதும் மொழிப்புனலாய்
கனவெழுதும் தேவதை இவள்
தன்வலியை தான் மறப்பாள்
உதிரத்துள் உறவு சொல்வாள்
கானகத்து பயிர் செழிக்க
கண் இமைக்குள் பூட்டி வைப்பாள்
வித்தகத்தை தினம் நிறைப்பாள்
விளைபயிரை செழிக்க வைப்பாள்
பண்பினையே தன் வாழ்வாய்- நாம்
பழகியெழ உணர்விடுவாள்
சிந்தனைக்குள் செப்பி எழும்
வேதமிவள் வார்த்தை இழை
அன்னையிவள் அகத்தினுள்ளே
விதைத்து எழுத் வியப்பின்மொழி
Author: arunwebhosting@gmail.com
Related Post
அகத்தினில் இன்பமே
செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே [...]
புரிய முயலாதே 1
நேற்று என்பது நினைவோடு மட்டும் நாளை என்பது கற்பனையாக சொட்டும் உண்மை மட்டும் இன்று நிகழ்கின்றது சுகம் வந்தால் நிரந்தரமென [...]
உயிரான உயிரே
ராணி சம்பந்தர் பயிருக்கு மண் சொந்தம் உயிருக்குக் கண்ணான கணவன் மனைவி பந்தம் மெய்யான இன்பம் வேலி பொய்யான துன்பம் [...]
