“அன்பின் வழியினிலே”
நேவிஸ் பிலிப் கவி இல(563)
அன்பின் வழியில் நடந்திட்டால்
ஆயிரம் நன்மை கூடி வரும்
இறையருள் ஒன்றே நாடி நின்றால்
ஈடில்லா பேரின்பம் கோடி பெறும்
அன்பென்ற பண்பொன்றே
பலத்தைக் கூட்டும்
மாந்தர்க்கு பயன் கருதா
செயல்பாடே மனதிலோங்கும்
புரிதலில் செழிக்குமன்பு
மன்னிப்பில் மலர்ந்து நிற்கும்
கொடுப்பதில் மனம் மகிழ்ந்து
பொறுப்பதில் பெருமை கொள்ளும்
வேதனை துன்பம் வெறுப்பின்றி
மேலான நல் வாழ்வு வாழ்வதற்கே
போதனைகள் நன்நெறிகள் மனதிலேற்று
இறையன்பை உணர்ந்து இன்புற்று
அன்பொன்றே மேலாக கொண்டிடுவோம்
மேதினியில் மேன்மை பெற்றே வாழ்ந்திடுவோம்
அன்பென்னும் விதையை விதைத்திடுவோம்
அன்பையே நாளும் வளரத்தெடுப்போம்…..
அன்புடன் நன்றி ………
Author: arunwebhosting@gmail.com
Related Post
வானிலை நிபுணருக்கு வாழ்த்து
சக்தி சிறினிசங்கர் அறுசீர் விருத்தம் சீர் வரையறை: விளம் விளம் விளம்/ விளம் விளம் விளம் அறிவியல் ஆர்வலர் உலகினை [...]
உயிரான உறவே…….
ரஜனி அன்ரன் ( B.A) உயிரான உறவே….. 12.02.2026 அறிமுகமில்லாத் தேடலின் ஆத்மார்த்தம் இசையோடுகலவி இசைவால் உயிராகிய உறவே உணர்வினில் [...]
உயிரான உறவு 86
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-02-2026 உயிரான உறவு என் தாயே உயிரெனக்கு தந்தவள் நீயே மூச்சாய் நின்று பேச்சு தந்தவளே-என் [...]
