பூம்பனி கொட்டுது
நகுலா சிவநாதன்
பூம்பனி கொட்டுது
பூம்பனி கொட்டுது புழுதியில் வீழ்குது
தேம்பியே அழுகுது வானம்
வானமும் கறுக்குது வையகம் பொழியுது
வண்ணமாய் இருக்குது காலை
நிறைபனி பொழியுது நிலமும் மூடுது
நீண்ட நேரம் இருளாக
வெள்ளையாய் கொட்டுது வெண்பனிச்சரால்
துள்ளியே மகிழுது தூரத்து விடியல்
அள்ளியே கையில் வைத்திட நாமும்
அகன்று செய்லுது பனியின் துகள்கள்;
கிள்ளி எறிந்திடும் மாணவமணிகளும்
துள்ளி விளையாடுவர் தூசிப்பனியில்
இயற்கையின் விந்தை இதுவென நாமும்
இணைந்து வாழ்தல் நலமன்றோ!
முயற்சியைக் கூட்டி முனைந்து நீயும்
முன்பனிக் காலை விடியலைப் பாரு!!
நகுலா சிவநாதன்1843
Author: arunwebhosting@gmail.com
Related Post
உருமாறும் பனித்துளிகள்
ராணி சம்பந்தர் இரவு பகல் ஓய்வின்றித் தூவிய பனி முட்டைகள் இலை உதிர்ந்த மொட்டை மரங்களில் வட்டப் பூவால் கொத்துக்கொத்தாக்கியது [...]
வாழ்வு வளம் பெற-2150 ஜெயா நடேச
எல்லோரும் நலம் பெற்று வாழவே எந்நாளும் இறைவன் விரும்புகிறார் ஏற்ற வழி செய்து பிறக்க வைத்தார் புவி போற்ற புது [...]
தருவாய் தளிராய்…
வசந்தா ஜெகதீசன் தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும் தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும் பருவ எழிலில் பண்பட்டு வாழும் தருவே [...]
