தருவாய் தளிராய்…
வசந்தா ஜெகதீசன்
தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும்
தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும்
பருவ எழிலில் பண்பட்டு வாழும்
தருவே புவியைத் தாங்கிடும் சக்தி
தருமே மழையை புவியீர்ப்பு சுழற்சி
தளிராய் இலையாய் சருகாய் உதிரும்
பருவச் சுழற்சியில் பயனை விதைக்கும்
எழிலில் நிறைக்கும் இயற்கைப் புவியை
மண்ணின் வளத்தை காத்திடும்
மகிமை
நிழலாய் நிறைக்கும் கனியாய் காயாய் கரிசனை பலவாய்
விறகாய் மரமாய் விதவிதமாகும் தளபாடப் பயனாய்
தருவின் கொடைகள் தரணிக்கு மகுடம்
தருமே பற்பல பாடங்கள் வாழ்வில்
ஏற்றே என்றும் ஒரு மரம் நாட்டு
எதிர்காலம் ஒளிரவழியினைச் சாற்று
வெட்டு மரத்தை வீழ்த்தும் முன்யோசி!கோடரிக்காம்பாய் வீழ்த்துதல்தவிர்ப்போம்.நன்றி
Author: arunwebhosting@gmail.com
Related Post
புனித ரமலானே வ௫க
வஜிதா முகமட் புனித ரமலானே வ௫க இறை அ௫ளை அள்ளித்த௫ம் மாதம் இரவு பகல் படைத்தவனை போற்றி வணங்கியி௫க்கும் நேரம் [...]
உயிரான உறவே…….
ரஜனி அன்ரன் ( B.A) உயிரான உறவே….. 12.02.2026 அறிமுகமில்லாத் தேடலின் ஆத்மார்த்தம் இசையோடுகலவி இசைவால் உயிராகிய உறவே உணர்வினில் [...]
என்னவென புரியவில்லை
செல்வி.நித்தியானந்தன் என்னவென புரியவில்லை ஏன்எனக்கு இப்படி என்னவெனபுரியவில்லை என்நேரம் சரியில்லையா புரிந்து கொள்ளவே முடியவில்லை காலநிலை மாற்றம் தொடர் மழையாகவும் [...]
