உயிரான உறவு…..
இரா.விஜயகௌரி
வைகறைகள் உயிர்ப்பெழுதும்
வனப்பு மிக்க விடியலுக்கு
தினமெழுதும் மொழிப்புனலாய்
கனவெழுதும் தேவதை இவள்
தன்வலியை தான் மறப்பாள்
உதிரத்துள் உறவு சொல்வாள்
கானகத்து பயிர் செழிக்க
கண் இமைக்குள் பூட்டி வைப்பாள்
வித்தகத்தை தினம் நிறைப்பாள்
விளைபயிரை செழிக்க வைப்பாள்
பண்பினையே தன் வாழ்வாய்- நாம்
பழகியெழ உணர்விடுவாள்
சிந்தனைக்குள் செப்பி எழும்
வேதமிவள் வார்த்தை இழை
அன்னையிவள் அகத்தினுள்ளே
விதைத்து எழுத் வியப்பின்மொழி
Author: arunwebhosting@gmail.com
Related Post
ஒழுக்கம்
இல 76 தலைப்பு = ஒழுக்கம் ஒழுக்கம் உயிரை விட மேலானது ஒழுக்கம் இல்லாதவர் வாழ்க்கையில் நன்மைகளை காண முடியாது [...]
உனை உணராதிருக்கிறாய்
இரா.விஜயகௌரி மெல்லப் பேசும் சின்ன வரிகளுள் சிதறாமல் பதறாமல் மெல்ல உந்தனை வழுவாத வாழ்வுப் பாதையில் நழுவாமல் செல்வதற்காய் அழைக்கிறேன் [...]
உயிரான உறவு
நகுலா சிவநாதன் உயிரான உறவு உயிரான காதல் உளத்துக்காதல் பயிராக வளரும் பண்பாட்டுக்காதல் நிலவாக உலவும் நித்தியக் காதல் நீண்டு [...]
