உயிரான உறவு…..
இரா.விஜயகௌரி
வைகறைகள் உயிர்ப்பெழுதும்
வனப்பு மிக்க விடியலுக்கு
தினமெழுதும் மொழிப்புனலாய்
கனவெழுதும் தேவதை இவள்
தன்வலியை தான் மறப்பாள்
உதிரத்துள் உறவு சொல்வாள்
கானகத்து பயிர் செழிக்க
கண் இமைக்குள் பூட்டி வைப்பாள்
வித்தகத்தை தினம் நிறைப்பாள்
விளைபயிரை செழிக்க வைப்பாள்
பண்பினையே தன் வாழ்வாய்- நாம்
பழகியெழ உணர்விடுவாள்
சிந்தனைக்குள் செப்பி எழும்
வேதமிவள் வார்த்தை இழை
அன்னையிவள் அகத்தினுள்ளே
விதைத்து எழுத் வியப்பின்மொழி
Author: arunwebhosting@gmail.com
Related Post
உனை உணராதிருக்கிறாய்
இரா.விஜயகௌரி மெல்லப் பேசும் சின்ன வரிகளுள் சிதறாமல் பதறாமல் மெல்ல உந்தனை வழுவாத வாழ்வுப் பாதையில் நழுவாமல் செல்வதற்காய் அழைக்கிறேன் [...]
மாசி திங்கள்
வியாழன் கவி 2292 மாசி திங்கள்.. மாசித் திங்கள் மனதோரம் சாரல் மனதை வருடும் நாட்களின் சேரல் குறுகிய காலத்தின் [...]
௨யிரான காதல்
வஜிதா முஹம்மட் ௨யிரான காதல் க௫வுக்குள் ௨யிராகி க௫ணைக்குள் நிஜமாகி வலிகளை வரமாக்கி ௨யி௫க்குள் ௨றவு தாயே மூச்சு முட்டும் [...]
