வானிலை நிபுணருக்கு வாழ்த்து
சக்தி சிறினிசங்கர்
அறுசீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் விளம் விளம்/ விளம் விளம் விளம்
அறிவியல் ஆர்வலர்
உலகினை
ஆள்பவர் அவரது சேவையில்
குறியது இருந்திடும் குறிப்புகள்
குறித்திடக் குவலயம் கேட்டிடும்
நெறிமுறை சொல்பவர் நிமிடமும்
நேரமும் சரியென உரைப்பவர்
செறிந்திடும் கல்வியும் ஞானமும்
சேர்ந்துதான் செப்புவர் வானிலை !
வானிலை மாறுதல் அறிந்தவர்
வாக்கினில் உண்மையை உரைப்பவர்
வானிலை நிபுணராய் வாழ்பவர்
வாழ்வினில் சேவையைச் செய்பவர்
மானிடர் காவலர் ஆனவர்
மாபெரும் உதவியாய் இருப்பவர்
தேனினைச் சொரிந்திடும் தீந்தமிழ்
தென்றலாய் வருடி வாழ்த்துகள்!
இன்று வானிலை அறிவியல் நிபுணர்கள் தினம் என்றமையால் கவிதை பிறந்தது.
நன்றி வணக்கம்
Author: arunwebhosting@gmail.com
Related Post
” செம்மொழியாம் எம்தமிழ் “
ரஜனி அன்ரன் (B.A) ” செம்மொழியாம் எம்தமிழ் ” 19.02.2026 அன்னைத் தமிழே அருமருந்தே அமுதத் தமிழாய் மலர்ந்தவளே முன்னைத் [...]
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை நெஞ்சினிலே என்றும் வெள்ளைமனசு [...]
அமைதியின் முகவடிவமே
மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் [...]
