” செம்மொழியாம் எம்தமிழ் “
ரஜனி அன்ரன் (B.A) ” செம்மொழியாம் எம்தமிழ் ” 19.02.2026
அன்னைத் தமிழே அருமருந்தே
அமுதத் தமிழாய் மலர்ந்தவளே
முன்னைத் தவத்தின்பயனாக
கன்னித் தமிழாய் கனிந்தவளே
உன்னைப் போற்றிப் பணிகின்றேன்
உலகின் முதல்மொழி நீதானே !
வள்ளுவன் வழியில் வாழ்வியல்தமிழாய்
கம்பன் கணிப்பில் காவியத்தமிழாய்
பாரதி நடையில் புதுமைத்தமிழாய்
பாரதிதாசன் வழியில் புரட்சித்தமிழாய்
இளங்கோவின் இலக்கில் இலக்கியத்தமிழாய்
இரண்டறக் கலந்த செம்மொழியே நீவாழி !
அன்னைத்தமிழின் சிறப்பினை
அளவிட வார்த்தைகள் கிடையாதே
இளமை புதுமை தொன்மை மிகுந்த
இனிமைத் தமிழே – உனை
மூச்சாய் கொண்டோம் பேச்சாய் கொண்டோம்
எத்தனை மொழிகள் தான்இருந்தாலும்
செம்மொழியாம் உந்தனுக்கு ஈடாகுமா ?
Author: ரஜனி அன்ரன்
Related Post
உயிரான உறவு
நகுலா சிவநாதன் உயிரான உறவு உயிரான காதல் உளத்துக்காதல் பயிராக வளரும் பண்பாட்டுக்காதல் நிலவாக உலவும் நித்தியக் காதல் நீண்டு [...]
“புதையுண்ட மலையகம்”
நேவிஸ் பிலிப் கவி இல(562) தெரிகின்ற தூரமும் தொடுகின்ற வானமும் பணிந்து வந்த அந்த வானத்தை காண விரைந்த என்மனம் [...]
மாசி திங்கள்
வியாழன் கவி 2292 மாசி திங்கள்.. மாசித் திங்கள் மனதோரம் சாரல் மனதை வருடும் நாட்களின் சேரல் குறுகிய காலத்தின் [...]
