இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை நெஞ்சினிலே என்றும்
வெள்ளைமனசு பூத்திருக்கு விரும்பும் இராகம் கனிந்திருக்கு
காற்றுவெளி ஓரத்திலே கானம் இசைக்கும் நேரத்திலே
தனிமையும் வெறுமை இல்லையே தனிச்சுகமே
பனிமலராய் நானும் பக்குவமாய் பாடலொன்றை
எண்ணமும் பாயுதே ஏழிசையும் மீட்டிடவே நன்றாய்
தெள்ளத் தெளிவாகி தெவிட்டாத பாசுரமும்
மரங்கள் அசைந்தாட மனதும் இசைந்தாட
குருவிகள் குரல்கொடுக்க குதூகலம் பிறந்திருக்க
அருவிபோல் அகம் குளிர ஆனந்தம் குலவிடவே
சருகுகள் சத்தமிடத் தாளங்கள் ஒலிபரப்ப
தேவமங்கையாக தேனிசை நானெடுத்து பரவியே நின்றிடவும்
வளைந்தாடும் செடிகளுமோ தலையாட்டி இரசித்திடவே
சிவரூபன் சர்வேஸ்வரி
Author: arunwebhosting@gmail.com
Related Post
பூம்பனி கொட்டுது
நகுலா சிவநாதன் பூம்பனி கொட்டுது பூம்பனி கொட்டுது புழுதியில் வீழ்குது தேம்பியே அழுகுது வானம் வானமும் கறுக்குது வையகம் பொழியுது [...]
கலந்து விட்ட உண்மைகள்
ராணி சம்பந்தர் பாதியைப் பாதியான மீதி தேடுது பிறப்பிலும் இறப்புச் சேதி கூடுது பிறந்தது ஒன்று இரண்டு ஆகுதே அறக்கப்பறக்க [...]
உயிரான உறவே-2153 ஜெயா நடேசன்
பத்து மாதங்கள் பத்திரமாய் சுமந்து குழந்தையின் முகத்தை பார்ப்பாள் பிரசவித்த வேதனையும் மறப்பாள் உதிரத்தை பாலாக்கி ஊட்டி மகிழ்வாள் மடியை [...]
