இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை நெஞ்சினிலே என்றும்
வெள்ளைமனசு பூத்திருக்கு விரும்பும் இராகம் கனிந்திருக்கு
காற்றுவெளி ஓரத்திலே கானம் இசைக்கும் நேரத்திலே
தனிமையும் வெறுமை இல்லையே தனிச்சுகமே
பனிமலராய் நானும் பக்குவமாய் பாடலொன்றை
எண்ணமும் பாயுதே ஏழிசையும் மீட்டிடவே நன்றாய்
தெள்ளத் தெளிவாகி தெவிட்டாத பாசுரமும்
மரங்கள் அசைந்தாட மனதும் இசைந்தாட
குருவிகள் குரல்கொடுக்க குதூகலம் பிறந்திருக்க
அருவிபோல் அகம் குளிர ஆனந்தம் குலவிடவே
சருகுகள் சத்தமிடத் தாளங்கள் ஒலிபரப்ப
தேவமங்கையாக தேனிசை நானெடுத்து பரவியே நின்றிடவும்
வளைந்தாடும் செடிகளுமோ தலையாட்டி இரசித்திடவே
சிவரூபன் சர்வேஸ்வரி
Author: arunwebhosting@gmail.com
Related Post
உயிரான உறவு 86
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-02-2026 உயிரான உறவு என் தாயே உயிரெனக்கு தந்தவள் நீயே மூச்சாய் நின்று பேச்சு தந்தவளே-என் [...]
உயிரான உறவு
செல்வி நித்தியானந்தன் உயிரான உறவு உயிருக்குள் கருவாகி உதிரத்துள் சுமையாகி உவகையில் இணைவாகி உள்ளமதில் கொள்ளை கொண்ட தாய்அவரே உலகைவிட்டு [...]
தீயநட்பு
இல 78 தலைப்பு= தீயநட்பு நம்மால் பயனுள்ள போது நட்பைக் காட்டியும் பயனில்லாத போது விலகி விடுவது இவ் நட்பே [...]
