உயிரான உறவே…
வசந்தா ஜெகதீசன்
உயிரான உறவே…
வெற்றி மிகு வாழ்வில்
வீறு கொள்ளும் சிந்தை
பற்றியே படர்கின்ற
பாதையின் செதுக்கல்
பாசமுடன் காட்டி
நேசமுடன் நிமிர்த்தி
வாழும் வழி சுட்டும்
வரலாற்றுப் புதுமை
தாய்மை என்னும் அன்பே
தரணி முதல் உறவு
தனக்கெனவே வாழத்
தைரியத்தின் உறவு
உயிரான உறவே
உதிரத்தின் கலப்பு
பேசும் மொழி ஆற்றல்
பெருமை நிறை வாழ்வு
வரமெனவே தந்த
உயிரான உறவு
தாங்கி நின்ற துயர்கள்
தலை நிமிர்ந்த கணங்கள்
நேசமுடன் எம்மை
பாசமுடன் ஈன்ற
உயிரான உறவே
நேசமும் நிமிர்வாய்
நிதம் வாழ்க நீவிர்
நன்றி
மிக்க நன்றி
Author: arunwebhosting@gmail.com
Related Post
உயிரான உறவு..
வியாழன் கவி 2288 உயிரான உறவு.. உதிரத்தில் உணவூட்டி உணர்வுக்குள் அன்பேந்தி உலகுக்கு வழிகாட்டியவள் உயிரான உறவானாள்.. கருவினுக்கு காரணியாய் [...]
அமைதியின் முகவடிவமே
மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் [...]
உயிரான உறவே…….
ரஜனி அன்ரன் ( B.A) உயிரான உறவே….. 12.02.2026 அறிமுகமில்லாத் தேடலின் ஆத்மார்த்தம் இசையோடுகலவி இசைவால் உயிராகிய உறவே உணர்வினில் [...]
