புரிய முயலாதே 1
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும் இன்று நிகழ்கின்றது
சுகம் வந்தால் நிரந்தரமென நம்பி
துயரம் நுழைகையில் ஏனென வெம்பி
இரண்டுங்கெட்டான் நிலையில் நாட்கள்
பிடிக்கமுடியாமல் நீராக வழிகின்றன
வந்த பாதை தெரியாத போது
போகும் பாதை தெரிவதும்தான் ஏது
முடிவில்லா ஒரு நீண்ட பயணமாக
விழுந்தாலும் எழுந்து நடக்க
சொல்லித் தருகுது காலம்
ஜெயம்
Author: arunwebhosting@gmail.com
Related Post
ஒழுக்கம்
இல 76 தலைப்பு = ஒழுக்கம் ஒழுக்கம் உயிரை விட மேலானது ஒழுக்கம் இல்லாதவர் வாழ்க்கையில் நன்மைகளை காண முடியாது [...]
உனை உணராதிருக்கிறாய்
இரா.விஜயகௌரி மெல்லப் பேசும் சின்ன வரிகளுள் சிதறாமல் பதறாமல் மெல்ல உந்தனை வழுவாத வாழ்வுப் பாதையில் நழுவாமல் செல்வதற்காய் அழைக்கிறேன் [...]
“அன்பின் வழியினிலே”
நேவிஸ் பிலிப் கவி இல(563) அன்பின் வழியில் நடந்திட்டால் ஆயிரம் நன்மை கூடி வரும் இறையருள் ஒன்றே நாடி நின்றால் [...]
