புரிய முயலாதே 1
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும் இன்று நிகழ்கின்றது
சுகம் வந்தால் நிரந்தரமென நம்பி
துயரம் நுழைகையில் ஏனென வெம்பி
இரண்டுங்கெட்டான் நிலையில் நாட்கள்
பிடிக்கமுடியாமல் நீராக வழிகின்றன
வந்த பாதை தெரியாத போது
போகும் பாதை தெரிவதும்தான் ஏது
முடிவில்லா ஒரு நீண்ட பயணமாக
விழுந்தாலும் எழுந்து நடக்க
சொல்லித் தருகுது காலம்
ஜெயம்
Author: arunwebhosting@gmail.com
Related Post
முடிவில்லாத் தொடக்கம் 84
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 05-02-2026 வாழ்வு முடிவில்லாத் தொடர்ச்சி வலிகளும் இன்பமும் வளைந்து நெளிந்து வட்டமிடும் சுழற்சி முடிந்து விட்டதென [...]
உயிரான உறவு..
வியாழன் கவி 2288 உயிரான உறவு.. உதிரத்தில் உணவூட்டி உணர்வுக்குள் அன்பேந்தி உலகுக்கு வழிகாட்டியவள் உயிரான உறவானாள்.. கருவினுக்கு காரணியாய் [...]
உயிரான உறவு
நகுலா சிவநாதன் உயிரான உறவு உயிரான காதல் உளத்துக்காதல் பயிராக வளரும் பண்பாட்டுக்காதல் நிலவாக உலவும் நித்தியக் காதல் நீண்டு [...]
