உயிரான உறவு..
வியாழன் கவி 2288
உயிரான உறவு..
உதிரத்தில் உணவூட்டி
உணர்வுக்குள் அன்பேந்தி
உலகுக்கு வழிகாட்டியவள்
உயிரான உறவானாள்..
கருவினுக்கு காரணியாய்
காலமெலாம் தாங்கி நின்று
கற்றிடவும் வல்லமை தனை
பெற்றிட தந்தை உயிரான உறவாம்..
காதலில் மூழ்கியெழுந்து
கண்ணியம் தனை சுமந்து
இருமன இணைவாகி
இல்லறம் ஆக்கும் உயிரான உறவு..
பிறப்புக்கும் இறப்புக்கும்
இணைப்பிற்கும் பிணைப்பிற்கும்
பந்தத்தின் தொடருகைக்கும்
ஒன்றிக்கும் உயிரான உறவு பல..
சிவதர்சனி இரா
11/2/2026
Author: arunwebhosting@gmail.com
Related Post
நினைவின் ஓரத்தில்..
வியாழன் கவி 2284!! நினைவுகளின் ஓரத்தில்..!! மறத்தல் அரியதாய் மனதிலே இறத்தல் வரை தொடரலாம் கரையும் பனியின் வீரியமோ கலந்தால் [...]
புரிய முயலாதே 1
நேற்று என்பது நினைவோடு மட்டும் நாளை என்பது கற்பனையாக சொட்டும் உண்மை மட்டும் இன்று நிகழ்கின்றது சுகம் வந்தால் நிரந்தரமென [...]
உனை உணராதிருக்கிறாய்
இரா.விஜயகௌரி மெல்லப் பேசும் சின்ன வரிகளுள் சிதறாமல் பதறாமல் மெல்ல உந்தனை வழுவாத வாழ்வுப் பாதையில் நழுவாமல் செல்வதற்காய் அழைக்கிறேன் [...]
